நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் - எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!
Aug 16, 2025, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் என மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், முன்னாள் பாரதப் பிரதமர் ‘பாரத ரத்னா’ அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. தேசத்தின் நலனிற்காக தனது சொந்த வாழ்வை சமுதாயத்திற்கு அர்ப்பணித்தவர், தான் பிரதமராக இருந்த காலகட்டங்களில் இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்களின் தலைமையில், பொக்ரான் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதன் மூலம், இந்தியர்கள் ஒருபோதும் உலக நாடுகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார். அய்யா அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினத்தில், இந்தியச் சமூகத்திற்கு அவர் அளித்த பங்களிப்புகளை பெருமையுடன் நினைவு கூர்வோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய்  அவர்களை நினைவு கூர்கிறோம். அவரது தொலைநோக்குப் பார்வை, இரக்கம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவம் ஆகியவை நவீன இந்தியாவின் பயணத்தில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளது.

உள்கட்டமைப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அணுசக்தி ஆகியவற்றில் அவர் செய்த பங்களிப்பு இந்தியாவை உலக வரைபடத்தில் ஒரு வலுவான நாடாக நிலைநிறுத்தியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்,

நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், நவீன இந்தியாவின் சிற்பி முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவுதினம் இன்று. இந்தியா, கல்வி, பொருளாதாரம், அறிவியல், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்ற கனவை இந்தியர்களின் மத்தியில் முதலில் விதைத்தவர்.

வல்லாதிக்க நாடுகளிடம் மட்டுமே இருந்த அணு ஆயுதத்தை “எங்களாலும் தயாரிக்க முடியும்” என இந்த உலகுக்கு பறைசாற்றிய தலைவர்.

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். இன்று நம் பாரத தேசம் காஷ்மீர் முதல் குமரி வரையிலும், மும்பை முதல் கொல்கத்தா வரையிலும் பிரம்மாண்ட சாலைகள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதற்கு, இவர் கண்ட கனவே காரணம்! இந்திய சரித்திரத்தின் மாபெரும் தலைவர் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவைப் போற்றுவோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: annamalaiminister l muruganatal bihari vajpayee death anniversaryBJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

Next Post

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

Related News

கிருஷ்ண ஜெயந்தி – கிருஷ்ணர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

ஆர்.ஆர்.எஸ்., முதல் ஆளுநர் வரை – இல.கணேசன் கடந்து வந்த பாதை!

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies