புதிய மைல் கல்லை எட்டிய NASA - ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!
Oct 2, 2025, 01:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

Web Desk by Web Desk
Aug 18, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாசா-இஸ்ரோவின் கூட்டு முயற்சியில் உருவான நிசார் செயற்கைக்கோள் அதன் ஆண்டனாவை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இரு விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் எட்டப்பட்டுள்ள இந்த புதிய மைல் கல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

இந்தியாவின் தென்-கிழக்கு கடற்கரையில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த ஜூலை 30-ம் தேதி ஏவப்பட்ட நிசார் செயற்கைக்கோள்,  இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட பணியாகும். இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் GSLV-F16 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஒரு காலத்தில் இந்தியாவிற்கு மறுக்கப்பட்ட கிரையோஜெனிக் இஞ்சினால் இயங்கும் GSLV-F16, தற்போது இந்தியாவின் விண்வெளி திறமைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1.3 பில்லியன் அமேரிக்க டாலர் செலவில் 2.8 டன்களுக்கு மேல் எடைகொண்ட NISAR, இந்திய விண்வெளி வரலாற்று கட்டமைக்கப்பட்ட மிக விலையுயர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறை இயக்கங்கள் மற்றும் காடுகளின் சீரழிவு ஆகியவற்றால், பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களை அங்குல அங்குலமாகக் கண்காணிப்பதையே இந்த செயற்கைக்கோள் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள், பேரிடர் தயார்நிலை, உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் காலநிலை மீட்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஏவப்பட்ட 17 நாட்களுக்குப் பின் ஆகஸ்ட் 15-ம் தேதி, நிசார் செயற்கைக்கோளின் 12 மீட்டர் ரேடார் ஆண்டனா ரிஃப்ளெக்டார் சுற்றுவட்டப்பாதையில் விரிவடைந்தது. தங்க முலாம் பூசப்பட்ட கம்பி வலையாலான இந்த டிரம் வடிவ ரிஃப்ளெக்டார், பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நாசாவின் பணிக்காக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாகும்.

நிசார் செயற்கைக்கோள் அதன் இட்டை ரேடார் அமைப்புகள் மூலம் நாசாவிலிருந்து L-பேண்ட் மற்றும் இஸ்ரோவிலிருந்து S-பேண்ட் ஆகியவை மூலம் நுண்ணலை துடிப்புகளைப் பூமியை நோக்கிச் செலுத்தி, தேவையான சமிக்ஞைகளை திரும்பப் பெறுவதன் மூலம், மேகங்கள், தாவரங்கள் மற்றும் மழையைக் கடந்தும் HIGH RESOLUTION IMAGING-ஐ செயல்படுத்துகிறது.

இந்த செயற்கைக்கோள் பூமியின் நிலம் மற்றும் பனி மேற்பரப்புகளின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒருமுறை பார்வையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானிகள் மேற்பரப்பு மாற்றங்களின் 3D நேர-இடைவெளி வரைபடங்களை உருவாக்க முடியும் எனவும், இந்த தரவுகள் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பிற பேரழிவுகளுக்கு முன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை ஆய்வாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பல்வேறு முடிவுகளை மேற்கொள்வதிலும் இது முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

தற்போது நிசார் செயற்கைக்கோளின் ஆண்டனா நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக நிசார் குழு ரேடார் அமைப்புகளை அளவீடு செய்து, முழு அளவிலான அறிவியல் நடவடிக்கைகளுக்குத் தயாராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அக்டோபர் 2025-க்குள் தரவுகளை வழங்கத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: NASA - ISRO கூட்டு முயற்சிNISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்ISRONASANASA-ISRO joint effort reaches new milestone: NISAR antenna placed in orbit
ShareTweetSendShare
Previous Post

சிக்கந்தர் பட தோல்விக்கு தான் பொறுப்பல்ல : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

Next Post

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies