அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!
Oct 2, 2025, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Web Desk by Web Desk
Aug 17, 2025, 09:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் அடங்கிய பெட்டி கைபற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

5 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், 8 CRPF போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 11 மணி நேரமாக நடைபெற்றுவந்த சோதனை நிறைவடைந்த நிலையில், சிபியூ, பிரிண்டர் மற்றும் பல ஆவணங்கள் அடங்கிய பெட்டியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, அமைச்சர் பெரியசாமியின் வாகனத்தை சோதனையிட முற்பட்ட அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் சரவணன் தீக்குளிக்க முயன்றார். பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சரவணனை திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.

இதேபோல் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் மற்றும் மகள் இந்திரா வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்திரா வீட்டில் 17 மணி நேரமாக நடந்த சோதனையில் 2 பைகள் மற்றும் ஒரு சூட்கேஸில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்திரா வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவலறிந்து திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த CRPF வீரர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக, அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: Enforcement DirectorateMinister I. Periyasamyraid in Minister I. Periyasamy houseED officials seized a box
ShareTweetSendShare
Previous Post

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

Next Post

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை – மத்திய அரசு பதில் மனு தாக்கல்!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies