பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!
Aug 19, 2025, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Web Desk by Web Desk
Aug 19, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரைகுறையாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டதால், இந்தியர் ஒருவர் கண்பார்வை மங்கி நாள்தோறும் அவதிப்படுகிறார். எதனால் இந்த பாதிப்பு…பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில் .

மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் விநோத சிகிச்சைகளை NEW ENGLAND பத்திரிகை செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் ஒன்று தான் கண்ணில் புழு புகுந்ததால் இந்தியர் ஒருவரின் பார்வை மங்கிய சம்பவம்.

35 வயதுமிக்க இந்தியர் ஒருவர், கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவர்களை அணுகியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் அணிந்திருக்கும் லென்ஸ் காரணமாக இருக்கலாம் என யூகித்த மருத்துவர்கள், அதற்கான சிகிச்சை மட்டும் அளித்து வந்துள்ளனர்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல பார்வை குறைந்த கொண்டே போனதால் குழப்பமடைந்த மருத்துவர்கள், உண்மையான காரணத்தை ஆராய்வதில் தீவிரம் காட்டினார்.

எல்லா வகையான மருத்துவ பரிசோதனைகளை நடத்திய போதும் காரணம் புலப்படாததால், குழம்பிப்போன மருத்துவர்கள் நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர்.

இந்த முறை நுண்ணிய பாக்டீரியாக்களைப் பார்க்கக் கூடிய மைக்ரோஸ்கோப்பை பயன்படுத்திய மருத்துவர்கள், அதில் வந்த முடிவை பார்த்துத் திகைப்படைந்தனர். பாதிக்கப்பட்ட நபரின் இடது கண்ணில் புழு ஒன்று அங்கும் இங்கும் நெளிந்து கொண்டிருந்தது தான் அதற்குக் காரணம்.

மனிதர்களிடம் ஒட்டுண்ணியாக வாழும் குணம் கொண்ட Gnathostoma spinigerum வகுப்பைச் சேர்ந்த புழு, இந்தியரின் கருவிழியில் இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், எப்படி கண்ணில் புகுந்தது என்பதை ஆராயத் தொடங்கினர்.

பாதிக்கப்பட்ட நபரிடம் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கத் தொடங்கியவர்கள், அரைகுறையாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு தான் என்பதை இறுதியில் கண்டறிந்தனர்.

உயிருக்கே ஆபத்தை என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் புழுவை அகற்றினர். ஆனால், பாதிக்கப்பட்ட நபருக்குக் கண்பார்வை திரும்பியதாகத் தெரியவில்லை.

மூளையைக் குடையும் குணமுடைய புழுவின் பாதிப்பைச் சரிசெய்ய முடியாமல் மருத்துவர்கள் தங்கள் மூளையைக் கசக்கியபடி உள்ளனர்.

Tags: கண்பார்வை மங்கிParasite that took away sight: Disaster from half-cooked foodபார்வையை பறித்த ஒட்டுண்ணிஅரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்
ShareTweetSendShare
Previous Post

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Next Post

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Load More

அண்மைச் செய்திகள்

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies