ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!
Oct 12, 2025, 09:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஜெர்மனியுடன் கைகோர்த்துளளது மத்திய அரசு…. புரோஜக்ட் 75 திட்டத்தின் கீழ் கடற்படையை நவீனமாக்க புதிய பாய்ச்சலுடன் இந்தியா தயாராகி வருகிறது. இதுகுறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரொஜக்ட் 75 இந்தியா திட்டம் தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

ஜெர்மனியுடன் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் “புராஜெக்ட் 75 இந்தியா” நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து, Mazagaon Dockyards limited, ThyssenKrupp Marine Systems ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஜெர்மன் உதவியுடன் இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டமைக்கப்பட உள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பமான AIP எனப்படும் Air Independent Propulsion systems, நீர்மூழ்கிக் கப்பல்களை மூன்று வாரங்கள்
வரை நீருக்கடியில் இருக்க அனுமதிக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால், நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமான திறன் மேம்படுவதோடு, இறக்குமதியை சார்ந்திருப்பது தவிர்க்கப்படும்.

இந்தியப் பெருங்கடலில் சீனா தனது இருப்பை நவீனத்துவத்துடன் விரிவுபடுத்துவதாலும், பாகிஸ்தான் தனது கடற்படையை வலுப்படுத்துவதாலும், நீர்மூழ்கிக் கப்பல்களை நவீனபடுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் 10 நீர்மூழ்கிக் கப்பல்களைப் படிப்படியாகக் கட்டமைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

புரொஜக்ட் 75 இந்தியா திட்டத்தைத் தவிர்த்து, மேலும் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆறு மாதங்களுக்குள் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும், இது இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்று எனவும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்indian navyஇந்தியாஇந்திய கடற்படைState-of-the-art submarines worth Rs. 70000 crore: India strengthens its navy
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

Next Post

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

Related News

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – அமித் ஷா, ஜெ.பி. நட்டா முக்கிய ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies