தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!
Aug 25, 2025, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர்ச் சதுர்த்தி கொண்டாட்டத்தை நாம் நெருங்கிவிட்ட நிலையில், விதவிதமாகத் தயாரிக்கப்படும் பிள்ளையார்ச் சிலைகள் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இந்தத் தருணத்தில் உலகிலேயே மிக உயரமான விநாயகர்ச் சிலை எங்கு உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

வனங்கள் செழிப்படைய முழுமுதற் காரணமாக விளங்கும் யானைகள், பண்டைய காலம் தொட்டே தாய்லாந்தின் கலாசாரம், பாரம்பரியம், ஆன்மிகம் போன்றவற்றில் பின்னி பிணைந்து நிற்பவை. இதன் காரணமாகவே யானையின் அடையாளமான விநாயகக் கடவுளை தாய்லாந்து போற்றி புகழ்பாடி வருகிறது.

இந்தியாவில் முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று கணேஷ வழிபாட்டுடன், விழாக்களும் களைகட்டுவது வழக்கம். சின்னஞ்சிறிய சிலைகள் முதல் பல அடி உயர சிலைகள் வரை வீடுகள், வீதிகள் தோறும் வைத்து பிள்ளையாருக்குப் பிடித்தவற்றை படைத்து இந்தியர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இப்படியிருக்க உலகிலேயே மிக உயரமான விநாயர்ச் சிலை இந்தியாவில் அல்லாமல் தாய்லாந்தில் இருப்பது ஆச்சரியமான உண்மை. தாய்லாந்தின் செழிப்பை உணர்த்தும் விதமாகச் சாச்சோங்சாவ் மாகாணம் க்லோங் குவான் மாவட்டத்தில் உள்ள கணேஷ் சர்வதேச பூங்காவில் கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது விநாயகர்ச் சிலை…. 39 மீட்டர் உயரம், கிட்டத்தட்ட 12 மாடி அளவுக்கு உயரமான இந்தச் சிலை, 40 ஆயிரம் சதுர மீட்டர்ப் பூங்காவில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது.

2009-2012ம் ஆண்டில் தாய்லாந்தின் சிற்ப கலைஞர்ப் பிடக் சலூம் லாவ் என்பவர், ஆனைமுகனை வடிவமைத்திருக்கிறார்… 100 டன் எடையில், 854 வெண்கல அடுக்குகளைக் கொண்டுள்ள கணபதி சிலை 4 கைகள் உடன் காட்சி தருகிறது. ப்ரப் பிகனேட், ப்ரப் பிகனேஷுயன் எனத் தாய் மொழியில் அழைக்கப்படும் நம் விநாயகனை முன்னேற்றத்தின் குறியீடாகப் பார்க்கிறது தாய்லாந்து.

அதனால்தான் அவரது கைகளில் ஆயுதங்களைத் தவிர்த்து, செழிப்பின் அடையாளமாகப் பலாப்பழத்தையும், இனிப்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகக் கரும்பையும், வாழ்வாதாரம் மற்றும் ஊட்டசத்தின் அடையாளமாக வாழைப்பழத்தையும், தெய்வீகம் மற்றும் ஞானத்தை உணர்த்தும் விதமாக மாம்பழத்தையும் தாய்லாந்து விநாயகர்க் கையில் தாங்கி நிற்கும்படி வடிவமைத்திருக்கிறது.

இதுதவிர ஞானத்தைப் பிரதிபலிக்கும் தாமரைக் கிரீடம், தேசத்தையும், உலகையும் பாதுகாக்க வல்லவர் என்பதைக் குறிக்கும் வகையில் ஓம் சின்னமும் கிரீடத்தில் உள்ளது.

ஆசிய கண்டத்திலேயே, ஒரே கல்லில் செய்யப்பட்ட மிகப்பெரிய விநாயகர்ச் சிலை, கோவை, புளியங்குளத்தில் இருக்கும் நிலையில், உலகிலேயே மிக உயரமான சிலைத் தாய்லாந்தில் இருப்பது பிள்ளையாரை அம்மக்கள் எந்தளவில் நேசிக்கிறார்கள், வழிபடுகிறார்கள் என்பதையே காட்டுவதாய் உள்ளது.

Tags: இந்தியாவிநாயகர் சதுர்த்திThe world's tallest Ganesha statue in Thailandவிநாயகர் சிலைவிநாயகர்
ShareTweetSendShare
Previous Post

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

Next Post

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

Related News

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

Load More

அண்மைச் செய்திகள்

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies