தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!
Oct 24, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர்ச் சதுர்த்தி கொண்டாட்டத்தை நாம் நெருங்கிவிட்ட நிலையில், விதவிதமாகத் தயாரிக்கப்படும் பிள்ளையார்ச் சிலைகள் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இந்தத் தருணத்தில் உலகிலேயே மிக உயரமான விநாயகர்ச் சிலை எங்கு உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

வனங்கள் செழிப்படைய முழுமுதற் காரணமாக விளங்கும் யானைகள், பண்டைய காலம் தொட்டே தாய்லாந்தின் கலாசாரம், பாரம்பரியம், ஆன்மிகம் போன்றவற்றில் பின்னி பிணைந்து நிற்பவை. இதன் காரணமாகவே யானையின் அடையாளமான விநாயகக் கடவுளை தாய்லாந்து போற்றி புகழ்பாடி வருகிறது.

இந்தியாவில் முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று கணேஷ வழிபாட்டுடன், விழாக்களும் களைகட்டுவது வழக்கம். சின்னஞ்சிறிய சிலைகள் முதல் பல அடி உயர சிலைகள் வரை வீடுகள், வீதிகள் தோறும் வைத்து பிள்ளையாருக்குப் பிடித்தவற்றை படைத்து இந்தியர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இப்படியிருக்க உலகிலேயே மிக உயரமான விநாயர்ச் சிலை இந்தியாவில் அல்லாமல் தாய்லாந்தில் இருப்பது ஆச்சரியமான உண்மை. தாய்லாந்தின் செழிப்பை உணர்த்தும் விதமாகச் சாச்சோங்சாவ் மாகாணம் க்லோங் குவான் மாவட்டத்தில் உள்ள கணேஷ் சர்வதேச பூங்காவில் கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது விநாயகர்ச் சிலை…. 39 மீட்டர் உயரம், கிட்டத்தட்ட 12 மாடி அளவுக்கு உயரமான இந்தச் சிலை, 40 ஆயிரம் சதுர மீட்டர்ப் பூங்காவில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது.

2009-2012ம் ஆண்டில் தாய்லாந்தின் சிற்ப கலைஞர்ப் பிடக் சலூம் லாவ் என்பவர், ஆனைமுகனை வடிவமைத்திருக்கிறார்… 100 டன் எடையில், 854 வெண்கல அடுக்குகளைக் கொண்டுள்ள கணபதி சிலை 4 கைகள் உடன் காட்சி தருகிறது. ப்ரப் பிகனேட், ப்ரப் பிகனேஷுயன் எனத் தாய் மொழியில் அழைக்கப்படும் நம் விநாயகனை முன்னேற்றத்தின் குறியீடாகப் பார்க்கிறது தாய்லாந்து.

அதனால்தான் அவரது கைகளில் ஆயுதங்களைத் தவிர்த்து, செழிப்பின் அடையாளமாகப் பலாப்பழத்தையும், இனிப்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகக் கரும்பையும், வாழ்வாதாரம் மற்றும் ஊட்டசத்தின் அடையாளமாக வாழைப்பழத்தையும், தெய்வீகம் மற்றும் ஞானத்தை உணர்த்தும் விதமாக மாம்பழத்தையும் தாய்லாந்து விநாயகர்க் கையில் தாங்கி நிற்கும்படி வடிவமைத்திருக்கிறது.

இதுதவிர ஞானத்தைப் பிரதிபலிக்கும் தாமரைக் கிரீடம், தேசத்தையும், உலகையும் பாதுகாக்க வல்லவர் என்பதைக் குறிக்கும் வகையில் ஓம் சின்னமும் கிரீடத்தில் உள்ளது.

ஆசிய கண்டத்திலேயே, ஒரே கல்லில் செய்யப்பட்ட மிகப்பெரிய விநாயகர்ச் சிலை, கோவை, புளியங்குளத்தில் இருக்கும் நிலையில், உலகிலேயே மிக உயரமான சிலைத் தாய்லாந்தில் இருப்பது பிள்ளையாரை அம்மக்கள் எந்தளவில் நேசிக்கிறார்கள், வழிபடுகிறார்கள் என்பதையே காட்டுவதாய் உள்ளது.

Tags: இந்தியாவிநாயகர் சதுர்த்திThe world's tallest Ganesha statue in Thailandவிநாயகர் சிலைவிநாயகர்
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

Next Post

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

Related News

ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடை!

அமெரிக்கா : ஒரே நேரத்தில் 2 வேலை பார்த்த அரசு ஊழியர் கைது!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூடு – தலையில் காயமடைந்த சிறுமி வீடு திரும்பினார்!

ஸ்பெயின் : உணவக நாற்காலிகளை குறிவைத்து திருடிய கும்பல்!

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் அதுவும் தோல்வியடையும் – ஈரான்

Load More

அண்மைச் செய்திகள்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

டெல்லி : BSF வரலாற்றில் புதிய சாதனை படைத்த பெண் காவலர்!

கர்நாடகா : மகேந்திரா தாரில் ஆபத்தான ஹெட்லைட்டை பொருத்தி பயணம்!

தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

மும்பையில் மராத்தி கட்டாயம் – விமானத்தில் பயணியை மிரட்டிய பெண்!

மகாராஷ்டிரா : போலீசாரால் பெண் மருத்துவருக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies