பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா - நல்லெண்ணத்தின் அடையாளம்!
Aug 25, 2025, 11:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்முவில் உள்ள தாவி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தானுக்கு இந்தியா முன்கூட்டியே தெரிவித்ததாக அதிகாரப் பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பகல்ஹாம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. மூன்று நதிகளின் நீர் மட்ட தரவுகளைப் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்வதையும் இந்தியா நிறுத்தி வைத்தது.

பாகிஸ்தானுடன் நடந்த முந்தைய 3 போர்களின் போதும் நிறுத்தப்படாத சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறுத்தியது. ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாயாது என்றும் பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்தார்.

சிந்து நதியின் தண்ணீரைத் தடுத்தால் அது நாட்டின் மீதான போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்த நிலையிலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

காலநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளான நாடுகளில், பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தீவிர வானிலை மாற்றங்களால் எதிர்ப்பாராத கனமழை, வெள்ளம் பாகிஸ்தானில் அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானையே கடும் மழையும் வெள்ளமும் புரட்டி போட்டுள்ளது. புனேர், பஜௌர், ஸ்வாட், ஷாங்க்லா, மன்சேரா மற்றும் பட்டாகிராம் ஆகிய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பஞ்சாப் மாகாணம் அதிகப் பாதிப்பு அடைந்துள்ளது. வடக்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையில் 24 மணி நேரத்தில் சுமார் 320 பேர்ப் பலியாகியுள்ளனர்.

வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாத இறுதியில் குறைந்துவிடும் பருவமழை,இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கியுள்ளது என்றும் அது, நீண்ட மாதங்கள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கனமழையால்,பெரும்பாலான ஆறுகள், ஏரிகள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லையைத் தாண்டி, சிந்து நதிப் படுகையின் ஜீலம், ரவி மற்றும் தாவி ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகளின் நீர் நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜம்மு-காஷ்மீர் ஜல் சக்தி அமைச்சர் ஜாவேத் அகமது ராணா உத்தரவிட்டுள்ளார்.

இந்தச்சூழலில், சிந்து நதியில் கடும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த பாகிஸ்தானுக்கு இந்தியா முன்கூட்டியே எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூலம் இந்தத் தகவல் பகிரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பருவமழைக் காலத்தில், மூன்று நதிகளில் நீர் மட்டம் உயர்வது குறித்து இந்தியா முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது.

பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கான அவசரக் கால நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவின் எச்சரிக்கை உதவியாக இருந்தது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், இந்திய பாகிஸ்தான் உறவில் மோசமடைந்துள்ள நிலையில், வெள்ளம் குறித்து இந்தியா முன்கூட்டியே எச்சரித்தது, நல்லெண்ணத்தின் அடையாளமாகும் என்று பாராட்டபடுகிறது.

Tags: Indiapakistanpakistan floodpakistan news todayFloods in Pakistan: India gave advance warning - a sign of goodwillபாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு
ShareTweetSendShare
Previous Post

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

Next Post

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

Related News

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies