சேலம் ஜலகண்டாபுரத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி 2 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வடமாநில நபர்களை, சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு போலீசார் துரத்தி பிடித்த சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது,
சேலம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கறிக்கடை மேலாளர் பார்த்திபன். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மற்றும் சமிர் குமார் ஆகிய இருவரும், பார்த்திபனை கத்தியால் தாக்கி, 2 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு, போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னைக்கு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார், ரயிலில் வந்திறங்கிய அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்டு அங்கிருந்த தப்ப முயன்ற இருவரையும் ரயில்வே போலீசார் துரத்திப் பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.