நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
Jan 14, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக நாடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பை நீக்குமாறு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், டிரம்ப் அடுத்தக்கட்ட நகர்வுக்குத் தயாராகி வருகிறார். வரி விதிப்பில் இருந்து பின்வாங்காமல் இருக்கச் சில சட்டங்களையும் ஆராய்ந்து வருகிறார். அது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து TRUTH இணையதளத்தில் விமர்சனக் கணைகளை தொடுத்துள்ள டிரம்ப், நீதிமன்றத்திற்கே தெரியும், இறுதியில் நாம் தான் வெல்வோம் என்று ரஜினி ஸ்டைலில் பதிவிட்டிருக்கிறார்.

உலக நாடுகள் மீதான வரி விதிப்பை, வர்த்தகப் போர் என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், அமெரிக்கத் தொழிலாளர்கள், நிறுவனங்களைப் பாதுகாக்க மிகச் சிறந்த கருவி வரிவிதிப்புதான் என்று நியாயப்படுத்தியிருக்கிறார்.

டிரம்பின் உலகளாவிய வரிகளைச் சட்டவிரோதமானது என்று அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் கூறியிருந்தாலும், அவை அப்படியே இருக்க அனுமதிக்கிறது. குறிப்பாக இதற்கு முன்பு எந்த அதிபரும் பயன்படுத்தாத, அசாதாரண சூழ்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய IEEPA சட்டத்தை, வர்த்தக ஏற்ற தாழ்வு நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற கோணத்தில், டிரம்ப் வரம்பை மீறி பயன்படுத்தியிருப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது.

இது டிரம்ப், மீண்டும் வரிகளை விதிக்க முடியுமா என்ற கேள்விகளையும் முன் வைத்தது. டிரம்ப் IEEPA- சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றாலும், இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு வேறு பல வழிகளும் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் IEEPA- சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றாலும், 1974ம் ஆண்டு அமெரிக்க வர்த்தகச் சட்டம் பிரிவு 301ன் படி வர்த்தகக் கூட்டாளிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள Lutnick மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளை டிரம்ப் கட்டாயப்படுத்த முடியும்.

எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 1962ம் ஆண்டு வர்த்தகச் சட்டப்பிரிவு 232-ஐ பயன்படுத்தி வரி விதிக்க முடியும். இதுதவிர, 1930ம் ஆண்டு இயற்றப்பட்ட வர்த்தகச் சட்டப்பிரிவு 338-ஐயும் பயன்படுத்தலாம். அமெரிக்க வரலாற்றில் இதுவரைப் பயன்படுத்தப்படாத இந்தச் சட்டம், அதிபரை 50 சதவிகிதம் வரை வரிவிதிக்க அனுமதிக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்புகள் எதுவாயினும், வரி விதிப்பில் இருந்து பின்வாங்கக் கூடாது என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்க இதுபோன்ற சட்டங்களும் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Tags: டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வுஅமெரிக்காவிற்கே பேரழிவுdoanald trumpIndiausaCourt ruling is a disaster for America: What is Trump's next move?
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

Next Post

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies