டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?
Jul 31, 2026, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி விதிப்பு சட்டவிரோமானது என அமெரிக்க நீதிமன்றம் கண்டித்துள்ளது. டிரம்பின் வரி வதிப்பு அதிகார மீறல் எனச் சம்மட்டி அடி கொடுத்துள்ள நீதிமன்றம், அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்துள்ளது.

சர்ச்சைகளுக்குப் பெயர் போன அமெரிக்க அதிபர் டொனால்ட் அண்மையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே 25 சதவிகித வரி விதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பையும் அண்மையில் அமல்படுத்தினார். டிரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கான இறக்குமதி பாதிக்கப்படுவதோடு, உள்நாட்டில் பொருட்களின் விலை உயரும் என்று அமெரிக்க மக்கள் எதிர்ப்பை  பதிவு செய்தனர்.

ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத டிரம்ப் உலக நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கலாம் என்ற சிந்தனையிலேயே மூழ்கியிருந்தார். டிரம்பின் வரி விதிப்பு முடிவுக்கு எதிராகக் கடந்த மே மாதம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

டிரம்பின் பெரும்பாலான வரி விதிப்புகள் சட்டவிரோதமானது என்று கண்டித்திருக்கும் நீதிமன்றம், கூடுதல் வரி விதிப்பை நீக்குமாறு உத்தரவிட்டது. அதிக வரி விதிப்பை நியாயப்படுத்தவே தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும், வரி விதிப்பு நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், வரி விதிப்பில் அமெரிக்க அதிபருக்குச் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறியது. அதேநேரத்தில், மேல்முறையீட்டுக்கு அக்டோபர் 14 வரைக் கால அவகாசமும் அளித்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள டிரம்ப், அனைத்து வரி விதிப்புகளும் நடைமுறையில் உள்ளதாகக் கூறியிருக்கிறார்.. இந்தத் தீர்ப்பு உறுதிபடுத்தப்பட்டால், அது அமெரிக்காவை அழித்துவிடும் என்றும் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு டிரம்புக்குப் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், இந்தத் தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபடுத்துமானால், பிற நாடுகளுக்குக் கூடுதலாக விதிக்கப்பட்ட வரியைத் திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

தற்போது சூழலில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மேல்முறையீட்டுக்குச் செல்லும் நிலையில், அக்டோபர் 14ம் தேதிக்குப் பிறகே வரி விதிப்பு ரத்தாகுமா அல்லது தொடருமா என்பது தெரியவரும்.

Tags: டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானதுDonald Trumpஇந்தியாஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்Trump's tax is illegal: Will the US court ruling benefit India?
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

Next Post

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies