வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் - முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!
Jun 15, 2026, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லாகூர் உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளச் சேதத்திற்கு இந்தியா தான் காரணம் என்று அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, மனிதாபிமான அடிப்படையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததை மறந்துவிடக் கூடாது என்று கண்டித்துள்ளது.

அண்மையில் பெய்த பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளமும்… நிலச்சரிவும், இந்தியா – பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தின. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், லாகூர்ப் புறநகர் பகுதிகளைச் சூறையாடியது… முக்கிய நகரமான ஜாங் பகுதி வெள்ளத்தில் மிதந்தது.. 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வெள்ளப் பாதிப்பாகப் பதிவானது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ, வெள்ள நிவாரண பணிகளையோ மேற்கொள்ளாமல் மக்களைக் காப்பாற்ற தவறிய பாகிஸ்தான் அரசு, வெள்ளப் பாதிப்புக்கு இந்தியாதான் காரணம் என்ற பழிசுமத்தியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததாலும், வெள்ளப் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கைத் தரவுகளை இந்தியா வழங்காததாலும், பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அமைச்சர் அசன் இக்பால் குறைகூறியுள்ளார்.

சிந்துநதி நீர் ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்திருந்தால் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவில் ரவி நதியின் குறுக்கே கட்டப்பட்ட மாதோபூர் அணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் லாகூர்ப் பெரும் சேதத்தைச் சந்தித்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட இந்தியாவே காரணம் என்ற கோணத்தில் பாகிஸ்தான் பிரசாரம் செய்து வருவதை இந்தியா கண்டித்துள்ளதோடு, குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே நேரத்தில் மாதோபூர் தடுப்பணையின் இரண்டு மதகுகள் மட்டும் உடைந்ததாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

மாதோபூர்  தடுப்பணை மதகுகள் சேதமடைந்த போதும், நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ள இந்தியா தரப்பு, தொடர்ந்து நீடித்த மழையே வெள்ளத்திற்குக் காரணம் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

1960 சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தபோதும், ​இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு நான்கு முறை வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டதையும் இந்தியா உறுதிபடுத்தியுள்ளது.

காலநிலை மாற்றம் என்பது இருதரப்பு பிரச்னை அல்ல என்பதை உணர்ந்து, மனிதாபிமானத்தோடு உதவி புரிந்த இந்தியாவுக்கு நன்றித் தெரிவிக்க மனமில்லாத பாகிஸ்தான் வீண் பழிசுமத்துவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்திய மக்களின் கருத்தாக உள்ளது.

Tags: India is responsible for the flood damage: Pakistan remains unchanged - should we forget the advance warning? India is a jokeIndiapakistan floodtoday newspakistan news today
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

Next Post

இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு!

Related News

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies