வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் - முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!
Oct 16, 2025, 03:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

Web Desk by Web Desk
Aug 30, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லாகூர் உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளச் சேதத்திற்கு இந்தியா தான் காரணம் என்று அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, மனிதாபிமான அடிப்படையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததை மறந்துவிடக் கூடாது என்று கண்டித்துள்ளது.

அண்மையில் பெய்த பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளமும்… நிலச்சரிவும், இந்தியா – பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தின. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், லாகூர்ப் புறநகர் பகுதிகளைச் சூறையாடியது… முக்கிய நகரமான ஜாங் பகுதி வெள்ளத்தில் மிதந்தது.. 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வெள்ளப் பாதிப்பாகப் பதிவானது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ, வெள்ள நிவாரண பணிகளையோ மேற்கொள்ளாமல் மக்களைக் காப்பாற்ற தவறிய பாகிஸ்தான் அரசு, வெள்ளப் பாதிப்புக்கு இந்தியாதான் காரணம் என்ற பழிசுமத்தியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததாலும், வெள்ளப் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கைத் தரவுகளை இந்தியா வழங்காததாலும், பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அமைச்சர் அசன் இக்பால் குறைகூறியுள்ளார்.

சிந்துநதி நீர் ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்திருந்தால் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவில் ரவி நதியின் குறுக்கே கட்டப்பட்ட மாதோபூர் அணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் லாகூர்ப் பெரும் சேதத்தைச் சந்தித்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட இந்தியாவே காரணம் என்ற கோணத்தில் பாகிஸ்தான் பிரசாரம் செய்து வருவதை இந்தியா கண்டித்துள்ளதோடு, குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே நேரத்தில் மாதோபூர் தடுப்பணையின் இரண்டு மதகுகள் மட்டும் உடைந்ததாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

மாதோபூர்  தடுப்பணை மதகுகள் சேதமடைந்த போதும், நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ள இந்தியா தரப்பு, தொடர்ந்து நீடித்த மழையே வெள்ளத்திற்குக் காரணம் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

1960 சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தபோதும், ​இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு நான்கு முறை வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டதையும் இந்தியா உறுதிபடுத்தியுள்ளது.

காலநிலை மாற்றம் என்பது இருதரப்பு பிரச்னை அல்ல என்பதை உணர்ந்து, மனிதாபிமானத்தோடு உதவி புரிந்த இந்தியாவுக்கு நன்றித் தெரிவிக்க மனமில்லாத பாகிஸ்தான் வீண் பழிசுமத்துவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்திய மக்களின் கருத்தாக உள்ளது.

Tags: India is responsible for the flood damage: Pakistan remains unchanged - should we forget the advance warning? India is a jokeIndiapakistan floodtoday newspakistan news today
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

Next Post

இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies