வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் - முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லாகூர் உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளச் சேதத்திற்கு இந்தியா தான் காரணம் என்று அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, மனிதாபிமான அடிப்படையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததை மறந்துவிடக் கூடாது என்று கண்டித்துள்ளது.

அண்மையில் பெய்த பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளமும்… நிலச்சரிவும், இந்தியா – பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தின. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், லாகூர்ப் புறநகர் பகுதிகளைச் சூறையாடியது… முக்கிய நகரமான ஜாங் பகுதி வெள்ளத்தில் மிதந்தது.. 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வெள்ளப் பாதிப்பாகப் பதிவானது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ, வெள்ள நிவாரண பணிகளையோ மேற்கொள்ளாமல் மக்களைக் காப்பாற்ற தவறிய பாகிஸ்தான் அரசு, வெள்ளப் பாதிப்புக்கு இந்தியாதான் காரணம் என்ற பழிசுமத்தியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததாலும், வெள்ளப் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கைத் தரவுகளை இந்தியா வழங்காததாலும், பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அமைச்சர் அசன் இக்பால் குறைகூறியுள்ளார்.

சிந்துநதி நீர் ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்திருந்தால் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவில் ரவி நதியின் குறுக்கே கட்டப்பட்ட மாதோபூர் அணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் லாகூர்ப் பெரும் சேதத்தைச் சந்தித்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட இந்தியாவே காரணம் என்ற கோணத்தில் பாகிஸ்தான் பிரசாரம் செய்து வருவதை இந்தியா கண்டித்துள்ளதோடு, குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே நேரத்தில் மாதோபூர் தடுப்பணையின் இரண்டு மதகுகள் மட்டும் உடைந்ததாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

மாதோபூர்  தடுப்பணை மதகுகள் சேதமடைந்த போதும், நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ள இந்தியா தரப்பு, தொடர்ந்து நீடித்த மழையே வெள்ளத்திற்குக் காரணம் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

1960 சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தபோதும், ​இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு நான்கு முறை வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டதையும் இந்தியா உறுதிபடுத்தியுள்ளது.

காலநிலை மாற்றம் என்பது இருதரப்பு பிரச்னை அல்ல என்பதை உணர்ந்து, மனிதாபிமானத்தோடு உதவி புரிந்த இந்தியாவுக்கு நன்றித் தெரிவிக்க மனமில்லாத பாகிஸ்தான் வீண் பழிசுமத்துவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்திய மக்களின் கருத்தாக உள்ளது.

Tags: Indiapakistan floodtoday newspakistan news todayIndia is responsible for the flood damage: Pakistan remains unchanged - should we forget the advance warning? India is a joke
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

Next Post

இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies