தர்மஸ்தலா பொய்வழக்கில் தொடர்பு? : வழக்கின் விசாரணையை திசைதிருப்ப உண்ணாவிரதம்!
Jan 14, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தர்மஸ்தலா பொய்வழக்கில் தொடர்பு? : வழக்கின் விசாரணையை திசைதிருப்ப உண்ணாவிரதம்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்கான நிதியைக் கேட்டுப் பெறுவதற்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறிவிட்டுத் தற்போது உண்ணாவிரதம் எனும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் காங்கிரஸ் எம் பி சசிகாந்த் செந்திலின் செயல்பாடு காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தர்மஸ்தலா வழக்கின் விசாரணைத் தன்னை நோக்கி திரும்புவதை முன்கூட்டியே அறிந்ததாலே இந்த உண்ணாவிரத நாடகம் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.

ஐ ஏ எஸ் அதிகாரியாகக் கர்நாடகாவின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த பின், அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டுக் காங்கிரஸில் இணைந்தவர்த் தான் இந்தச் சசிகாந்த் செந்தில். கட்சி மேலிடத்தில் கிடைத்த வரவேற்பின் காரணமாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர்  தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான பின், எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வராத சசிகாந்த் செந்தில், தற்போது சமக்ரச் சிக்‌ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ்த் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வலியுறுத்தி, கடந்த 29ஆம் தேதி திருவள்ளூரில் தனது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றுத் தன் தொகுதிக்கும், தமிழகத்திற்கும் தேவையான திட்டங்களையும், நிதியையும் கேட்டுப்பெறுவதற்கான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டு தற்போது கல்விக்கான நிதியை வழங்க மறுப்பதாகக் கூறி உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர், தேசிய அளவிலோ, மாநில அளவிலோ இருக்கும் கட்சித் தலைவர்களிடம் எந்தவித ஒப்புதலையும் பெறாமல் கூட தன்னிச்சையாக உண்ணாவிரதத்தைத் தொடங்கியதன் பின்னணியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று மறைந்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அண்மையில் நாட்டையே புரட்டிப் போட்ட தர்மஸ்தலா வழக்கில் பொய்ப்புகார் அளித்த நபர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோடிக்கணக்கான பக்தர்கள் வருகைத் தரும் மஞ்சுநாதா கோயிலின் புனிதத்தைக் கெடுக்க திருவள்ளூர் எம் பி சசிகாந்த் செந்தில் தீட்டிய சதி தான் இந்தப் பொய்ப்புகார் எனக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார்.

புகார்த் தாரர் கடந்த பதினொரு ஆண்டுகளாகத் தமிழகத்தில் தங்கியிருந்ததும், காங்கிரஸ் மேலிடத்தின் மூலம் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு அழுத்தம் கொடுத்ததையும் பார்க்கும் போது தர்மஸ்தலா பொய் புகாருக்கும் காங்கிரஸ் எம் பி சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பிருப்பதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழத்தொடங்கின.

தர்மஸ்தலா வழக்கின் புகார்தாரரிடம் சிறப்பு விசாரணைக் குழு கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்திற்கான நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பு அனைத்தையும் தவறவிட்டுவிட்ட சசிகாந்த் செந்தில், திடீரெனச் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருப்பது அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

யாருக்கும் எந்தவிதத் தகவலையும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருப்பது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தற்போது மேல்சிகிச்சைக்காகச் சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகாந்த் செந்திலைக் கடந்த மூன்று தினங்களாகச் சந்திக்காத காங்கிரஸ் தமிழகத் தலைவர் செல்வபெருந்தகை, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில், இரவு நேரத்தில் பார்த்துத் தனது ஆதரவை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை மிஞ்சும் வகையில் சசிகாந்த் செந்தில் நடத்தும் உண்ணாவிரத நாடகம் திமுகத் தலைமைக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை யாரும் அவரைச் சந்திக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையாகவே தமிழகத்திற்கான கல்வி நிதியைப் பெறுவதற்காகத்தான் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறாரா ? அல்லது தர்மஸ்தலா வழக்கின் விசாரணைத் தன்னை நோக்கி திரும்புவதை முன்கூட்டியே அறிந்தததால் அதனைத் திசை திருப்புவதற்காக உண்ணாவிரதம் எனும் நாடகத்தைக் கையில் எடுத்திருக்கிறாரா? என்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் பதில் கிடைக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Tags: தர்மஸ்தலாIs Dharmasthala involved in the false case?: Fasting to divert the investigation of the caseதிசைதிருப்ப உண்ணாவிரதம்தர்மஸ்தலா பொய்வழக்கில் தொடர்பு?காங்கிரஸ் எம் பி சசிகாந்த் செந்தில்
ShareTweetSendShare
Previous Post

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

Next Post

வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆஸி.யில் இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies