பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம் : ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!
Sep 2, 2025, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம் : ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

Web Desk by Web Desk
Sep 1, 2025, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர்ப் பஹல்காமில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத் தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு,ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சீனாவின் தியான்ஜின்னில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயங்கரவாதத்தின் சுமைகளை இந்தியா தாங்கி வருவதாகவும், வெளிப்படையாகச் சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரவளிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

மேலும், பயங்கரவாதம் குறித்த எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட குரலில் அனைத்து நாடுகளும் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

பிரதமர் மோடி இப்படி உரையாற்றிய சில நிமிடங்களிலேயே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் பிரகடனம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ள இந்தப் பிரகடனத்தில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள், ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் ஆதரவு அளித்தவர்கள் எனச் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதில் இறையாண்மைக் கொண்ட நாடுகள் மற்றும் அவற்றின் அதிகாரிகளின் முன்னணி பங்கை இந்தப் பிரகடனம் அங்கீகரித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கடுமையாகக் கண்டித்துள்ளன. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளன.

இந்தப் பிரகடனத்தில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானைப் பற்றி நேரிடையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் உறுப்பு நாடுகளின் உறுதியை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனம் மீண்டும் உறுதி படுத்தியுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாகப் பாகிஸ்தான் உள்ளது என்ற இந்தியாவின் நீண்டகாலமாகவே கூறிவருகிறது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், பஹல்காம் பயங்கர வாத தாக்குதல் குறித்து எதுவும் குறிப்பிடப் படாத கூட்டறிக்கையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திடவில்லை. இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக, கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் வெளியிடப் பட்ட கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்துக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில், பாகிஸ்தானை தனிமைப் படுத்த இந்திய எடுத்த முயற்சிக்குக் கிடைத்த ராஜ தந்திர வெற்றியாகும்.

Tags: பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம்SCO chinaPM Modipm modi news todaypakistan news todaySCO summit condemns Pahalgam attack: A victory for diplomacy
ShareTweetSendShare
Previous Post

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

Next Post

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

Related News

உ.பி.யில் தொடர் மழை – யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி செல்லும் வெள்ளநீர்!

டெல்லியில் தொடர் மழை – கடும் போக்குவரத்து நெரிசல்!

ஜம்முவில் தொடர் மழை – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

குஜராத் சூரத் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

மும்பை லால்பாக்சா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் தரிசனம்!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்!

திமுக அரசால் உரிய நேரத்தில் டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

மூடப்பட்ட கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறையை பார்வையிட்ட முதல்வர் – அண்ணாமலை விமர்சனம்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நோக்கம் என்ன? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அஜித்குமார் கொலை வழக்கு – குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம் : ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

சீன அதிபர் வழங்கிய ராஜமரியாதை : சிகப்பு கொடி Hongqi காரில் பயணித்த பிரதமர் மோடி!

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies