சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!
Oct 23, 2025, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது திறமையால் பல்வேறு உச்சங்களைத் தொட்டு வருகிறார். மேலும், பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார். யார் அவர்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஒருவரின் வெளித்தோற்றத்தைக் கொண்டு அவரின் திறமையை எடைபோடும் தவறான அணுகுமுறை உலகம் முழுவதுமே இருந்து வருகிறது. நிறத்தைக் கொண்டு, உருவத்தைக் கொண்டு, உடையைக் கொண்டு, குடும்ப பின்னணியைக் கொண்டு ஒருவரை மதிப்பிட முயல்வது எப்போதும் தவறாகதான் முடியும்.

இதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார், ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ். வெறும் 3.2 அடி உயரம் மட்டுமே கொண்ட இவர், தனது துறையில் எட்டி பிடிக்காத உயரங்களே இல்லை. உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் பிறந்த இவர், மிகவும் புகழ்பெற்ற வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் பயின்றார்.

தந்தை ராணுவத்தில் பணியாற்றியதாலும், தாய் பள்ளி முதல்வராக இருந்ததாலும் ஆர்த்தி டோக்ராவைச் சிறு வயதுமுதலே துணிச்சலான பெண்ணாக வளர்த்தனர். உயரம் குறைவாக உள்ளதால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையையும் நீக்கினர்.

பள்ளி படிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பொருளாதாரப் பட்டம் பெற்ற ஆர்த்தி டோக்ரா, இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடிவெடுத்தார். அவரது உயரத்தைக் கொண்டு பலர் அவரைச் சாதாரணமாகத்தான் எடைப் போட்டார்கள். இருப்பினும் முழுமூச்சாகப் படித்த அவர் முதல் முயற்சியிலேயே, ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வானார்.

தான் பணியாற்றிய மாவட்டங்களில் எல்லாம் முன்மாதிரியான பல திட்டங்களை அவர்  கொண்டு வந்தார். குறிப்பாக, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில் ஆஜ்மீரில் அவர்  கொண்டு வந்த “புக்கா டாய்லெட்” திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வந்து அந்தத் திட்டம் குறித்து அறிந்து சென்றனர்.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலின்போது அஜ்மீர் மாவட்ட தேர்தல் ஆணையராகச் சிறப்பாக செயல்பட்டதற்காக, கடந்த 2019ம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் இருந்து தேசிய விருதையும் அவர்  பெற்றார். மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக அவர்  தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படி, தனது சாதனைகளால் பலருக்கு அவர் ரோல்மாடலாக விளங்கி வருகிறார் . மேலும், உயரத்தைக் காரணம் காட்டி விமர்சித்தவர்களும் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கும் உயர்ந்துள்ளார் ஆர்த்தி டோக்ரா.

Tags: ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ்iasராஜஸ்தான்Height is no barrier to achievement: A female officer who has reached the pinnacle through her activitiesபெண் அதிகாரிஆர்த்தி டோக்ரா
ShareTweetSendShare
Previous Post

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

Next Post

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை – சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்டா மாவட்ட வளர்ச்சிக்கு முதல்வர் என்ன செய்தார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம்!

புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies