பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!
Mar 15, 2026, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே தங்களுக்காக  கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் 7 ஆண்டுகள் கடந்தும் குடியிருக்க முடியவில்லை எனப் பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பழங்குடியின மக்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் பயன்பாடற்ற நிலையில் இருப்பது குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த பரவக்கல் பகுதியில் 20க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குடிநீர், உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

பழங்குடியின மக்களின் தொடர் வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த 2018 – 19ம் ஆண்டில் பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் 17 வீடுகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கட்டப்பட்ட வீடுகளும் தற்போதுவரைப் பயன்பாட்டிற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடியிருப்புகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான குடிநீர் இணைப்பு வசதியோ, மின்சார வசதியோ இன்று வரை வழங்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கென வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் அதனை வழங்காமல் காலம் தாழ்த்து மிகுந்த வேதனையளிப்பதாகப் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டி முடிக்கப்பட்டும் பயனற்ற நிலையில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கான குடியிருப்புகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தங்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் இது தான் எனத் தெரிந்தும் அதில் வாழ முடியாத சூழலுக்கு பழங்குடியின மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், பழங்குடியினர் நலத்துறையும் உடனடியாகக் கூடுதல் கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளைப் பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: வேலூர்Tribal people in distress: Houses not allocated even after 7 years of constructionபரிதவிக்கும் பழங்குடியின மக்கள்
ShareTweetSendShare
Previous Post

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

Next Post

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies