பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!
Jul 29, 2026, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே தங்களுக்காக  கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் 7 ஆண்டுகள் கடந்தும் குடியிருக்க முடியவில்லை எனப் பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பழங்குடியின மக்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் பயன்பாடற்ற நிலையில் இருப்பது குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த பரவக்கல் பகுதியில் 20க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குடிநீர், உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

பழங்குடியின மக்களின் தொடர் வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த 2018 – 19ம் ஆண்டில் பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் 17 வீடுகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கட்டப்பட்ட வீடுகளும் தற்போதுவரைப் பயன்பாட்டிற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடியிருப்புகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான குடிநீர் இணைப்பு வசதியோ, மின்சார வசதியோ இன்று வரை வழங்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கென வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் அதனை வழங்காமல் காலம் தாழ்த்து மிகுந்த வேதனையளிப்பதாகப் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டி முடிக்கப்பட்டும் பயனற்ற நிலையில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கான குடியிருப்புகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தங்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் இது தான் எனத் தெரிந்தும் அதில் வாழ முடியாத சூழலுக்கு பழங்குடியின மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், பழங்குடியினர் நலத்துறையும் உடனடியாகக் கூடுதல் கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளைப் பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: வேலூர்Tribal people in distress: Houses not allocated even after 7 years of constructionபரிதவிக்கும் பழங்குடியின மக்கள்
ShareTweetSendShare
Previous Post

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

Next Post

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies