யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?
Jun 14, 2026, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் முக்கிய தலைவரான காய் கி-யைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

இந்தியா – சீனா இடையேயான உறவில் பல ஆண்டுகளாகவே விரிசல் நீடித்து வருகிறது. எல்லைப் பிரச்னை, பாகிஸ்தான் உடனான நெருங்கிய உறவு உள்ளிட்டவை அதற்கான பிரதான காரணமாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் சீனாவுடன் சுமூக உறவைக் கடைபிடிக்க இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது.

இந்நிலையில்தான், 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு எந்தளவு முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறதோ, அதற்கு இணையாகக் காய் கி என்பவரை மோடி சந்தித்துப் பேசியதும் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

காய் கி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய தலைவராக உள்ளார். பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினராகவும் உள்ள அவர், அதிபர் ஜி ஜின்பிங்கின் வலது கரமாகக் கருதப்படுகிறார். சீன அரசு எடுக்கும் அனைத்து முக்கிய முடிவுகளிலும் இவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். மிகவும் கறாரான தலைவரான இவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிரிக்காத மனிதர் என அழைக்கப்படுகிறார்.

பெரும்பாலும் இவர் வெளிநாட்டுத் தலைவர்களை சந்திப்பதில்லை. மீறி அவர்  சந்தித்தால் அது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாகத்தான் இருக்கும் என யூகித்துகொள்ளலாம். இப்படிப்பட்ட காய் கி-தான் தற்போது பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் 45 நிமிடங்களுக்கு இந்தச் சந்திப்பு நீடித்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட எந்த வெளிநாட்டுத் தலைவரையும் காய் கி சந்திக்கவில்லை என்பதில் இருந்தே, இந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

எல்லைப் பிரச்னை, இரு நாட்டு உறவை மேம்படுத்துதல், வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடியும், காய் கியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாகத்தான், லிபுலேக், ஷிப்கி லா, நாது லா உள்ளிட்ட எல்லைப் பகுதிகள் வழியாக வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது, நேரடி விமான சேவையை மீண்டும் தொடர்வது, விசா நடைமுறையை எளிதாக்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான காய் கியையும் அடுத்தடுத்து பிரதமர் மோடி சந்தித்தது, இரு நாட்டு உறவின் நேர்மறையான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.

Tags: இந்தியா - சீனாWho is this Kai Ki?: Why was the meeting with Modi important?யார் இந்த காய் கி?காய் கிPM Modichinaபிரதமர் மோடிsco
ShareTweetSendShare
Previous Post

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

Next Post

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

Related News

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies