அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் - நிர்கதியான குடும்பம்!
Sep 3, 2025, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

Web Desk by Web Desk
Sep 3, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை  சூளைமேடு அருகே முறையாக மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடைபெற்ற உயிரிழப்புக்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

சென்னை  சூளைமேடு வீரபாண்டி நகரில் முறையாக மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் ஒருவர் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டப்படும் பள்ளங்களை முறையாக மூடுவதில்லை எனவும், பணிகள் நடைபெறுவதற்கான எச்சரிக்கைப் பலகைகள் கூட வைக்கப்படாததே தமது மகளின் உயிரிழப்புக்குக் காரணம் என உயிரிழந்த திபாவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

முறையாக மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து ஏற்பட்ட உயிரிழப்பை மறைக்க, தீபா கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பரப்பிய உண்மைக்குப் புரம்பான தகவல் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கணவர் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து தனது குடும்பத்தைக் கவனித்து வந்த தீபா உயிரிழந்த நிலையில் குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

சூளைமேடு பகுதி மட்டுமல்லாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் எனும் பெயரில் தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமலே கிடக்கின்றன. அதிலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் பள்ளங்களில் சிக்கி அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாக்த்திடம் பலமுறைப் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் புகார்த் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் முன் 95 சதவிகிதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் பணிகள் நீடிப்பதோடு, அதற்காக ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முழுக்க முழுக்கச் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடைபெற்ற உயிரிழப்புக்கு உரிய நிவாரண நிதியை வழங்குவதோடு, சென்னை மாநகராட்சி முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

Tags: today newsThe Corporation's lies exposed: A woman's life lost - a family devastatedஅம்பலமான மாநகராட்சியின் பொய்
ShareTweetSendShare
Previous Post

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

Next Post

இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!

Related News

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

நவீன நாஜிசத்திற்கு எதிராக கூட்டணி : புதினுடன் கரம்கோர்த்த வடகொரியாவின் கிம் ஜாங் உன்!

பாக். பிரதமருக்கு குடைச்சல் கொடுக்கும் ஹெட்செட் : மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!

இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருவாரூர் : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்!

வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?

மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies