தீபாவளி பரிசுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன்
Mar 15, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீபாவளி பரிசுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் மூலம், மோடி அரசின் தீபாவளி பரிசுக்கு மிக்க நன்றி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் 2.0-ஐ அறிமுகப்படுத்திய  பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜிஎஸ்டியில் 5% மற்றும் 18% என்ற எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு அமைப்பை அறிமுகப்படுத்துவது என்பது நமது பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பு உருவாக்குவதிலும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மேலும், சிறு-குறு தொழில்வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க அளவில் பெரும் பயனளிக்கும். இந்த சீர்திருத்தங்கள் வணிகத்திற்கு மட்டுமன்றி மக்களுக்கும் பெரும் பயனளிப்பவை. மக்களின் செலவுத் திறனையும் சேமிப்புத் திறனையும் ஒருசேர ஊக்குவிக்கும் ஓர் அற்புத முயற்சி இது.

அன்றாட வாழ்வின் சுமையைக் குறைக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நமது விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லிகள் போன்ற முக்கியமான பொருட்கள் இப்போது குறைந்த ஜிஎஸ்டி விகிதத்தில் கிடைக்கப் போகின்றன. இது கிராமப்புற மக்களின் மீது நமது மத்திய அரசு கொண்டுள்ள உண்மையான அக்கறையைப் பிரதிபலிக்கிறது. இந்த சீர்திருத்தங்களின் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், நடுத்தர குடும்பங்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.

அடுத்ததாக, கடந்த பட்ஜெட்டில் தெரிவித்தது போல மக்களின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டியைக் கருணை உள்ளத்துடன் முழுமையாக தள்ளுபடி செய்துள்ளது நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் என்றுமே நமது பாஜக சோடை போனதில்லை என்பதற்கான மற்றொரு உதாரணம் இது.

ஒரே வருடத்தில் வருமான வரியில் மாபெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து நடுத்தர மக்களுக்கு வருமான வரிவிலக்கு அளித்ததோடு, ஜிஎஸ்டியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்து மக்களின் சேமிப்பைக் கணிசமாக ஒரு அரசு உயர்த்துவதென்பது உலக வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை. அந்த வகையில் இன்றைய சமூகத்தை வலுப்படுத்தி, நாளைய வளமான பொருளாதாரத்திற்கு அடித்தளமிடும் இந்த ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள், இதுவரை எந்த அரசும் வழங்காத மக்களுக்கான தீபாவளி பரிசு தான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: PM ModigstGST 2.0 reforms: Nayinar Nagendran thanks Prime Minister ModiThank you for the Diwali gift: Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

Next Post

சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணி : விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies