அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி - பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!
Jan 14, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது பதவியையும், அதிகாரத்தையும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யும் வகையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தித்தொகுப்பைப் பார்க்கலாம்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, வெளிச்சத்திற்கு வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், தனது அதிகாரச் செல்வாக்கை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறார். ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், இரண்டுமுறை அமெரிக்க அதிபர் டிரம்பை  சந்தித்திருந்தார். அதிகாரப் போதையில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், 2030ஆம் ஆண்டுவரைத் தனது அதிகாரத்தை நீட்டிக்க அச்சாரம் போட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியாக “continuity of the system” என்ற திட்டத்தையும் அவர் முன்னெடுத்திருக்கிறார்.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் தனியார் பண்ணை வீட்டில் இது தொடர்பான சந்திப்பு ரகசியமாக நடைபெற்றுள்ளளது. இதில் பாகிஸ்தானில் மூன்று முறைப் பிரதமராக இருந்தவரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் நிறுவனருமான நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அவருடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸ், ராணுவ தளபதி அசிம் முனீர், ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் அசிம் மாலிக் உள்ளிட்டோர்  கலந்து கொண்டிருக்கிறார்கள்…

பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் யாரும், தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத நிலையில், இந்தக் கூட்டத்தில் “continuity of the system” என்ற திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், சிவில் – ராணுவ நிர்வாகக் கட்டமைப்பை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் தேசிய முடிவுகள், மூத்த ராணுவ நியமனங்கள் உள்ளிட்டவற்றில் அரசுக்கும், ராணுவத் தலைமைக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி, அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொள்ளவும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அரசியலில் இருந்தே ஓரம் கட்டவும் பாகிஸ்தான் ராணுவ தளபதி திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அசிம் முனீரின் பதவிக்காலம் 2025 நவம்பர் 28ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவரது இந்த நகர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2022ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அசிம் முனீர், தனது மூன்றாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சூழலில், 1952ம் ஆண்டு ராணுவ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, தனது பதவியை 5 ஆண்டுகள் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு முன்னதாக ராணுவ தளபதியாக இருந்த கமர் ஜாவேத் பஜ்வா, மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிந்த பின்னரும் ஆறு ஆண்டுகள் ராணுவ தளபதியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Asim Munirpakistan news todayஷெபாஸ் ஷெரீப்Power-hungry Pakistan Army Chief - Shehbaz Sharif becomes puppet Prime Ministerபாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்
ShareTweetSendShare
Previous Post

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Next Post

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies