அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி - தீராத துயரத்தில் பயணிகள்!
Sep 5, 2025, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் மதுரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருச்சி, சிவகங்கை, சிவகாசி, விருதுநகர், திருச்செந்தூர் என பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மதுரை மாட்டுத்தாவணி எம் ஜி ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான மக்கள் பயன்படுத்தும் இந்தப் பேருந்து நிலையத்தில் பண்டிகைக் காலம் என்றால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்தப் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

பராமரிப்பு எனும் பெயரில் பூட்டப்பட்ட ஆண்களுக்கான கழிப்பறை கடந்த ஆறு மாதங்களாகத் திறக்கப்படாததால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள் மூடியிருப்பதை சாதகமாக பயன்படுத்தி தனியார் கழிப்பறைகள் அதிகக் கட்டணத்தை வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேருந்து நிலையத்தின் கழிவுநீர்க் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததன் காரணமாகக் கழிவுநீர் ஆங்காங்கே வெளியேறி சுகாதாரச் சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்காக மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் இயந்திரமும் யாருக்கும் பயனற்ற நிலையில் காட்சிபொருளாகவே காட்சியளிக்கின்றன

தூங்காநகரம் எனப் பெயர்பெற்ற மதுரையில் அமைந்துள்ள மிகப்பெரிய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இரவு பகலாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்றிக் காணப்படுவது பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக  கவனம் செலுத்தி பேருந்து பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதோடு, பேருந்து நிலையத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags: மாநகராட்சிWhere are the basic amenities? : The slumbering corporation - commuters in endless miseryதீராத துயரத்தில் பயணிகள்மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்
ShareTweetSendShare
Previous Post

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

Next Post

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies