”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
Sep 5, 2025, 11:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 09:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிஎஸ்டி சீரமைப்பால் அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பது இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில், 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரியில் புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி 4 அடுக்குகளுக்குப் பதிலாக 5%, 18% என இரண்டடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி சீர்திருத்தம், அமெரிக்க வரி விதிப்பு எனப் பல்வேறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் தனியார்  தொலைக்காட்சி ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

அப்போது, ஜிஎஸ்டி சீரமைப்பின்போது நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தம்மிடம் வலியுறுத்தியதாக அவர் கூறினார். ஜிஎஸ்டி வரிகளை சீரமைப்பது குறித்து பிரதமர் மோடி தன்னிடம் 8 மாதங்களுக்கு முன்பே பேசியதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜிஎஸ்டி சீரமைப்புகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.

ஆன்லைன் சூதாட்டம் நாட்டையும், இளைஞர்களையும் அழித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முடிவு அவசியமானது என்றும் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் நிதிநிலை நன்றாக இருப்பதாகவே தெளிவுபடுத்திய நிர்மலா சீதாராமன், சில அரசியல் கட்சிகள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு, நிதி தரவில்லை எனப் பின்னர் மத்திய அரசு குறைக் கூறுவதாகவும் சாடினார்.

மக்கள் பிரச்னைகளை விவாதிக்கவே நாடாளுமன்றம் எனச் சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், ஆனால் துரிதிருஷ்டவசமாக அவ்வாறு நடப்பதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார்.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் நோக்கம், அனைத்துப் பொருட்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்வது மட்டுமல்ல என்றும், நிச்சயமற்ற உலகளாவிய வர்த்தகக் கொள்கைக்கு மத்தியில் சுய மரியாதையைப் பெறுவதும் ஆத்ம நிர்பர்  பாரத்தின் நோக்கம் என்றும் தெளிவுபடுத்தினார்.

தேச நலனுக்காக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலை  கொண்டு வரும் எண்ணம் தற்போதில்லை என்றும் தெளிவுபடுத்தினார். யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை இந்தியா தான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்புகச்சா எண்ணெய்"Crude oil purchases from Russia will continue": No one can dictate - Nirmala Sitharaman's planPM ModiDonald Trumpரஷ்யா
ShareTweetSendShare
Previous Post

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Next Post

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

Load More

அண்மைச் செய்திகள்

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies