கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் - கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?
Jan 14, 2026, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட கராச்சி-பெஷாவர் திட்டத்திற்கு நிதியளிப்பதிலிருந்து சீனா பின்வாங்கி உள்ளது. அதற்கான காரணம் குறித்து, இந்தச் செய்தி தொகுப்பில் வரிவாகக் காண்போம்.

சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இந்தியா உடன் எல்லைப் பிரச்னையைக் கொண்டுள்ள சீனாவும் பாகிஸ்தானும், மற்றொரு புறம் ஒன்றுக்கொன்று கைகோர்த்து நட்புறவை  பேணி வருகின்றன.

பாகிஸ்தானின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதி வழங்குவது எனப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்த சீனா, அந்நாட்டுடனான வர்த்தகத்தையும் அதிகரிக்கச் செய்தது. இதனால் ஏராளமான ராணுவ தளவாடங்களை  பாகிஸ்தானுக்கு விற்பனை  செய்தது சீனா. பாகிஸ்தான் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவை  சீனாவின் தயாரிப்பே.

இந்தச் சூழலில் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் செயல்படுத்திய திட்டம்தான் கராச்சி-பெஷாவர்த் திட்டம். 1,800 கிலோமீட்டர் நீளமுள்ள கராச்சி – பெஷாவர் திட்டம், பாகிஸ்தானின் முக்கிய ரயில் பாதைகளை நவீனமயமாக்கி, கராச்சியையும் பெஷாவரையும் இணைக்க  செயல்படுத்தப்பட்டது.

பயணிகளின் எண்ணிக்கையும், சரக்கு பரிமாற்றத்தையும் அதிகரித்து, பாகிஸ்தான் ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கம். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் முக்கியப் பகுதியாகவும் இத்திட்டம் பார்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்கெனவே 2015-19 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கட்டப்பட்டு வந்தன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியான குவாதர்  கிழக்கு விரிகுடா விரைவுச் சாலைக் கடந்த 2022இல் நிறைவடைந்தது. இந்த நிலையில், கராச்சி-பெஷாவர்  திட்டத்திற்கு நிதி வழங்க சீனா மறுத்துவிட்டது. அத்துடன் இந்தத் திட்டத்திலிருந்தும் சீனா வெளியேறியிருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் மோசமான நிதி நிலைமை, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமம், மின்துறை முதலீடுகளில் நிலுவைத் தொகைப் பிரச்னை ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திலிருந்து சீனா வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

மேலும், சீனா பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்து வருவதாலும், அதிக அபாயமுள்ள நாடுகளில் முதலீட்டை  குறைக்கும் போக்கும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்கா-சீனா இடையேயான உறவு மோசமடைந்து வருவதும், இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்படுவதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

சீனாவின் முடிவால் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் பாகிஸ்தான், கராச்சி-பெஷாவர்  திட்டத்திற்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியளிக்கக்கோரி ஆசிய மேம்பாட்டு வங்கியை நாடியுள்ளது. இருப்பினும் சீனாவின் ஆதரவின்மையால் கராச்சி-பெஷாவர்  திட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், சீனாவின் இந்த முடிவு பாகிஸ்தானுக்குப் பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.

Tags: பாகிஸ்தான்today newsசீனாpakistan news todayPakistan shocked by China's abandonment - Karachi-Peshawar project in question?கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?
ShareTweetSendShare
Previous Post

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

Next Post

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies