கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் - கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?
Sep 5, 2025, 11:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Web Desk by Web Desk
Sep 5, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட கராச்சி-பெஷாவர் திட்டத்திற்கு நிதியளிப்பதிலிருந்து சீனா பின்வாங்கி உள்ளது. அதற்கான காரணம் குறித்து, இந்தச் செய்தி தொகுப்பில் வரிவாகக் காண்போம்.

சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இந்தியா உடன் எல்லைப் பிரச்னையைக் கொண்டுள்ள சீனாவும் பாகிஸ்தானும், மற்றொரு புறம் ஒன்றுக்கொன்று கைகோர்த்து நட்புறவை  பேணி வருகின்றன.

பாகிஸ்தானின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதி வழங்குவது எனப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்த சீனா, அந்நாட்டுடனான வர்த்தகத்தையும் அதிகரிக்கச் செய்தது. இதனால் ஏராளமான ராணுவ தளவாடங்களை  பாகிஸ்தானுக்கு விற்பனை  செய்தது சீனா. பாகிஸ்தான் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவை  சீனாவின் தயாரிப்பே.

இந்தச் சூழலில் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் செயல்படுத்திய திட்டம்தான் கராச்சி-பெஷாவர்த் திட்டம். 1,800 கிலோமீட்டர் நீளமுள்ள கராச்சி – பெஷாவர் திட்டம், பாகிஸ்தானின் முக்கிய ரயில் பாதைகளை நவீனமயமாக்கி, கராச்சியையும் பெஷாவரையும் இணைக்க  செயல்படுத்தப்பட்டது.

பயணிகளின் எண்ணிக்கையும், சரக்கு பரிமாற்றத்தையும் அதிகரித்து, பாகிஸ்தான் ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கம். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் முக்கியப் பகுதியாகவும் இத்திட்டம் பார்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்கெனவே 2015-19 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கட்டப்பட்டு வந்தன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியான குவாதர்  கிழக்கு விரிகுடா விரைவுச் சாலைக் கடந்த 2022இல் நிறைவடைந்தது. இந்த நிலையில், கராச்சி-பெஷாவர்  திட்டத்திற்கு நிதி வழங்க சீனா மறுத்துவிட்டது. அத்துடன் இந்தத் திட்டத்திலிருந்தும் சீனா வெளியேறியிருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் மோசமான நிதி நிலைமை, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமம், மின்துறை முதலீடுகளில் நிலுவைத் தொகைப் பிரச்னை ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திலிருந்து சீனா வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

மேலும், சீனா பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்து வருவதாலும், அதிக அபாயமுள்ள நாடுகளில் முதலீட்டை  குறைக்கும் போக்கும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்கா-சீனா இடையேயான உறவு மோசமடைந்து வருவதும், இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்படுவதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

சீனாவின் முடிவால் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் பாகிஸ்தான், கராச்சி-பெஷாவர்  திட்டத்திற்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியளிக்கக்கோரி ஆசிய மேம்பாட்டு வங்கியை நாடியுள்ளது. இருப்பினும் சீனாவின் ஆதரவின்மையால் கராச்சி-பெஷாவர்  திட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், சீனாவின் இந்த முடிவு பாகிஸ்தானுக்குப் பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.

Tags: கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?பாகிஸ்தான்today newsசீனாpakistan news todayPakistan shocked by China's abandonment - Karachi-Peshawar project in question?
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

Next Post

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

Load More

அண்மைச் செய்திகள்

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies