மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!
Sep 6, 2025, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

Web Desk by Web Desk
Sep 6, 2025, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகவும் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றான மலாக்கா ஜலசந்தி ரோந்துப் படைப்பிரிவில் இந்தியாவும் இணைந்தது குறித்த செய்தித் தொகுப்பை  தற்போது பார்ப்போம்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும் மலேசிய தீபகற்பத்திற்கும் இடையில் அமைந்துள்ளது மலாக்கா ஜலசந்தி. அந்தமான் கடலையும், தென்சீனக் கடலையும் இணைக்கும் மலாக்கா ஜலசந்தி, மலேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமான மலாக்காவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மலாக்கா ஜலசந்தி, உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்று. கடற்கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளால் கடந்த 2004ஆம் ஆண்டு மலாக்கா நீரிணை ரோந்து படை உருவாக்கப்பட்டது. பின்னர் இதில் தாய்லாந்து இணைந்தது. MSPயின் நீண்ட கால ஒருங்கிணைப்பாளராகச் சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிங்கப்பூர்  பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் இடையேயான சந்திப்பின் போது மலாக்கா ஜலசந்தி ரோந்து பணியில் இணைவதற்கான ஒப்புதல் கிடைத்தது.

செயற்கை நுண்​ணறி​வு, குவாண்​டம் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் தொழில்​நுட்​பம் ஆகியவற்றில் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தோ-பசிபிக் முழுவதும் கடல்சார்  பாதுகாப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தியாவின் கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 60% சதவீதம், மலாக்கா ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. மலாக்கா ஜலசந்தியில் இருந்து 600 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் இந்திய கடற்படைத் தனது தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது.

இதனால் அங்கு ரோந்து மேற்கொண்டு கடற்கரை மாகாணங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த MSPயின் ஆதரவை நாடியது. இதன் மூலம் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தி இந்தியா தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். MSPயில் இந்தியா இணைவது தங்களுக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் என்று சிங்கப்பூர் நம்புகிறது.

தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை ஆதிக்கம் இருந்து வரும் நிலையில், MSPயில் இந்தியா இணைந்ததால், ஆசிய கடல்சார்  பாதுகாப்பு உறவு, குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: singaporePatrolling the Strait of Malacca: India joins MSPமலாக்கா ஜலசந்தியில் ரோந்து
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் முதல் காரை விற்பனை செய்த டெஸ்லா நிறுவனம்!

Next Post

அமெரிக்கா : குளிர்ந்தாலும் அழகான ஆலங்கட்டி மழை!

Related News

மகாராஷ்டிரா : திருவிழா போல் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

ஜம்மு காஷ்மீர் : அசோக சின்னத்தை உடைத்து அகற்றிய சம்பவத்துக்குக் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன!

பாகிஸ்தானிடம் இருந்து விலகும் சீனா?

இந்தியா மீதான 50% வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் : இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா அதிர்ச்சி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு!

திருப்பூர் : பெப்சி, கொக்கோகோலா பானங்களை கீழே ஊற்றி அமெரிக்காவுக்கு எதிர்ப்பு!

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி தொடரும் : செங்கோட்டையன்

திண்டுக்கல் : இளம் பெண் மரணத்தில் சந்தேகம் – உறவினர்கள் சாலை மறியல்!

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து : இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி டிரா!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருவண்ணாமலை கோயில் முழுவதும் குப்பைகள், துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

பெண் பலி விவகாரம் – மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies