மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!
Jan 14, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகவும் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றான மலாக்கா ஜலசந்தி ரோந்துப் படைப்பிரிவில் இந்தியாவும் இணைந்தது குறித்த செய்தித் தொகுப்பை  தற்போது பார்ப்போம்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும் மலேசிய தீபகற்பத்திற்கும் இடையில் அமைந்துள்ளது மலாக்கா ஜலசந்தி. அந்தமான் கடலையும், தென்சீனக் கடலையும் இணைக்கும் மலாக்கா ஜலசந்தி, மலேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமான மலாக்காவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மலாக்கா ஜலசந்தி, உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்று. கடற்கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளால் கடந்த 2004ஆம் ஆண்டு மலாக்கா நீரிணை ரோந்து படை உருவாக்கப்பட்டது. பின்னர் இதில் தாய்லாந்து இணைந்தது. MSPயின் நீண்ட கால ஒருங்கிணைப்பாளராகச் சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிங்கப்பூர்  பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் இடையேயான சந்திப்பின் போது மலாக்கா ஜலசந்தி ரோந்து பணியில் இணைவதற்கான ஒப்புதல் கிடைத்தது.

செயற்கை நுண்​ணறி​வு, குவாண்​டம் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் தொழில்​நுட்​பம் ஆகியவற்றில் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தோ-பசிபிக் முழுவதும் கடல்சார்  பாதுகாப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தியாவின் கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 60% சதவீதம், மலாக்கா ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. மலாக்கா ஜலசந்தியில் இருந்து 600 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் இந்திய கடற்படைத் தனது தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது.

இதனால் அங்கு ரோந்து மேற்கொண்டு கடற்கரை மாகாணங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த MSPயின் ஆதரவை நாடியது. இதன் மூலம் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தி இந்தியா தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். MSPயில் இந்தியா இணைவது தங்களுக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் என்று சிங்கப்பூர் நம்புகிறது.

தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை ஆதிக்கம் இருந்து வரும் நிலையில், MSPயில் இந்தியா இணைந்ததால், ஆசிய கடல்சார்  பாதுகாப்பு உறவு, குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: singaporePatrolling the Strait of Malacca: India joins MSPமலாக்கா ஜலசந்தியில் ரோந்து
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

Next Post

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies