நேபாளத்தில் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளதால் மேற்குவங்க எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில், இந்தோ-நேபாள் எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லை வழியாக வரும் மக்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.