திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசுப் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உப்பிலியபுரம் அடுத்த ஆலத்துடையான் பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
இதற்காகப் பள்ளியில் முன்னேற்பாடுகள் நடைபெற்றதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு முகாமிற்காகப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
மாணவர்களின் கல்வி நேரத்தை பயன்படுத்திதான் முகாம் நடத்த வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.