கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? - நயினார் நாகேந்திரன்
Oct 27, 2025, 07:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Sep 11, 2025, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த தமிழகக் காவல் துறையினரின் மீது நடுரோட்டில் அந்த போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  நிர்வாகத் திறனற்ற அறிவாலய
அரசு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் கைபிடித்து அழைத்துச் சென்று முட்டுச் சந்தில் நிறுத்தியுள்ளது என்பதை உணர்த்தும் இந்தச் சம்பவம் அரசு அதிகாரிகளைப் பதற்றத்திலும், பொதுமக்களை அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுவும் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பிறகும் கூட காவல் ஆய்வாளரின் முன்னிலையிலேயே கொஞ்சம் கூட பயமின்றி தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுவது, காவல்நிலையத்தை அடித்து நொறுக்குவது என அராஜகத்தின் உச்சியில் அந்த நபர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கையில், திமுக ஆட்சியின் கீழ் இயங்கும் காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கும் நம்பிக்கையில்லை, குற்றவாளிகளுக்கும் துளியும் பயமில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கடந்த நான்காண்டுகளில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருவதற்கான காரணம் என்ன என்பது தான் புரியவில்லை.

ஒருவேளை, திமுகவின் கட்டளைகளை மட்டுமே நிறைவேற்றும் கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரைக் கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? அல்லது தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையினரிடையே நேர்மையும் வலிமையும் குறைந்துவிட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுவதாகவும் கூறியுள்ளார்.

இது பெரும் ஆபத்தானது. எனவே, “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என வீண் வசனம் பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின்
முதலில் காவல்துறையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைத் தாக்குதல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

தமிழகக் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, அவர்கள் எவ்வித சமரசமுமின்றி மக்கள் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Tamil Nadu BJP state president Nainar Nagendrandrug gang attacking policeChennaicm stalinDMK governmentPulianthope
ShareTweetSendShare
Previous Post

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

Next Post

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

Related News

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை சந்தித்த ஹிருத்திக் ரோஷன்!

அச்சுறுத்தல் காரணமாக 41பேரின் குடும்பங்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம்? – நயினார் நாகேந்திரன்

சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies