கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? - நயினார் நாகேந்திரன்
Jan 14, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 11, 2025, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த தமிழகக் காவல் துறையினரின் மீது நடுரோட்டில் அந்த போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  நிர்வாகத் திறனற்ற அறிவாலய
அரசு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் கைபிடித்து அழைத்துச் சென்று முட்டுச் சந்தில் நிறுத்தியுள்ளது என்பதை உணர்த்தும் இந்தச் சம்பவம் அரசு அதிகாரிகளைப் பதற்றத்திலும், பொதுமக்களை அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுவும் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பிறகும் கூட காவல் ஆய்வாளரின் முன்னிலையிலேயே கொஞ்சம் கூட பயமின்றி தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுவது, காவல்நிலையத்தை அடித்து நொறுக்குவது என அராஜகத்தின் உச்சியில் அந்த நபர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கையில், திமுக ஆட்சியின் கீழ் இயங்கும் காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கும் நம்பிக்கையில்லை, குற்றவாளிகளுக்கும் துளியும் பயமில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கடந்த நான்காண்டுகளில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருவதற்கான காரணம் என்ன என்பது தான் புரியவில்லை.

ஒருவேளை, திமுகவின் கட்டளைகளை மட்டுமே நிறைவேற்றும் கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரைக் கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? அல்லது தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையினரிடையே நேர்மையும் வலிமையும் குறைந்துவிட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுவதாகவும் கூறியுள்ளார்.

இது பெரும் ஆபத்தானது. எனவே, “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என வீண் வசனம் பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின்
முதலில் காவல்துறையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைத் தாக்குதல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

தமிழகக் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, அவர்கள் எவ்வித சமரசமுமின்றி மக்கள் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Chennaicm stalinDMK governmentPulianthopeTamil Nadu BJP state president Nainar Nagendrandrug gang attacking police
ShareTweetSendShare
Previous Post

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

Next Post

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies