கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? - நயினார் நாகேந்திரன்
Aug 31, 2026, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 11, 2025, 02:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த தமிழகக் காவல் துறையினரின் மீது நடுரோட்டில் அந்த போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  நிர்வாகத் திறனற்ற அறிவாலய
அரசு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் கைபிடித்து அழைத்துச் சென்று முட்டுச் சந்தில் நிறுத்தியுள்ளது என்பதை உணர்த்தும் இந்தச் சம்பவம் அரசு அதிகாரிகளைப் பதற்றத்திலும், பொதுமக்களை அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுவும் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பிறகும் கூட காவல் ஆய்வாளரின் முன்னிலையிலேயே கொஞ்சம் கூட பயமின்றி தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுவது, காவல்நிலையத்தை அடித்து நொறுக்குவது என அராஜகத்தின் உச்சியில் அந்த நபர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கையில், திமுக ஆட்சியின் கீழ் இயங்கும் காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கும் நம்பிக்கையில்லை, குற்றவாளிகளுக்கும் துளியும் பயமில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கடந்த நான்காண்டுகளில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருவதற்கான காரணம் என்ன என்பது தான் புரியவில்லை.

ஒருவேளை, திமுகவின் கட்டளைகளை மட்டுமே நிறைவேற்றும் கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரைக் கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? அல்லது தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையினரிடையே நேர்மையும் வலிமையும் குறைந்துவிட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுவதாகவும் கூறியுள்ளார்.

இது பெரும் ஆபத்தானது. எனவே, “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என வீண் வசனம் பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின்
முதலில் காவல்துறையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைத் தாக்குதல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

தமிழகக் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, அவர்கள் எவ்வித சமரசமுமின்றி மக்கள் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Tamil Nadu BJP state president Nainar Nagendrandrug gang attacking policeChennaicm stalinDMK governmentPulianthope
Share
Tweet
SendShare
Previous Post

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

Next Post

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies