பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா - இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!
Sep 11, 2025, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

Web Desk by Web Desk
Sep 11, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ் மற்றும் பிரம்மோஸ் என்ஜி ஏவுகணை சோதனையில் ரஷ்யா ஆர்வம் காட்டுவதன் மூலம், இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்போம்.

இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் உருவானது பிரம்மோஸ் ஏவுகணை. நிலம், நீர் மற்றும் வான்பரப்பில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த பிரம்மோஸ் ஏவுகணை.

உலகில் எந்த வான் பாதுகாப்பு அமைப்பும் பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறிக்க முடியாது. இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் இது நிரூபிக்கப்பட்டது. இதனால் பல நாடுகள் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க அணுகியுள்ளன.

இந்த வரிசையில், ரஷ்யா தனது ஆயுதப் படைகளில் பிரம்மோஸின் அடுத்த தலைமுறை ஏவுகணையான ’பிரம்மோஸ்-என்ஜி’-யை சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.

பிரம்மோஸ்-என்ஜி என்பது பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட மற்றும் இலகு ரக வடிவமாகும். இது இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய சின்னமாக பார்க்கப்படுகிறது. இது அசல் பிரம்மோஸ் ஏவுகணையில் பாதியளவு எடை கொண்டது, இதனால் போர் விமானங்கள் அதிக ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும்.

பிற நாடுகள் காட்டும் ஆர்வத்தால் ஊக்கமடைந்திருக்கும் பிரம்மோஸ் ஏரோ-ஸ்பேஸ், தற்போது ஏவுகணையை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது உற்பத்தி செலவைக் குறைத்து, வாங்குவோர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 25 யூனிட்கள் மட்டுமே அதாவது சுமார் 1,000 பிரம்மோஸ் ஏவுகணைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது பிரம்மோஸின் அதிக தேவை காரணமாக உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன.

பொதுவாக பிரம்மோஸ் ஏவுகணை 3,000 கிலோ எடை கொண்டது. அதே நேரத்தில் விமானப்படையில் பயன்படுத்தக் கூடிய வகை 2,500 கிலோ எடை கொண்டது. பிரம்மோஸ்-என்ஜி சுமார் 1,250 கிலோ எடையுள்ளதாக இருக்கும் இது மிக்-29 மற்றும் எல்சிஏ தேஜாஸ் எம்கே-1 ஏ போன்ற இலகுவான போர் விமானங்களில் சுமந்து சென்று ஏவுவதற்கு ஏற்றது.

எண்ணற்ற சிறப்புகள் வாய்ந்த பிரம்மோஸ்-என்ஜியின் சோதனை 2026இல் தொடங்கும் என ஓய்வுபெற்ற ஜாகுவார் விமானி விஜயேந்திரா கே.தாக்கூர் தெரிவித்திருப்பதாக யூரேசியன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணையை ரஷ்யா பெறும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு BrahMos Aerospace துணை தலைமை நிர்வாக அதிகாரி Chilukoti Chandrasekhar தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகளின் விலையை குறைக்க இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து பணியாற்றி வருவதாகவும், இதன் மூலம் அதிகப்படியான ஏற்றுமதி ஒப்பந்தங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்றுமதியுடன் சேர்ந்து இந்தியாவின் ஆயுதப் படைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை விரிவாக்க வேண்டும் என்றும், அதற்கான திறன்களை மேம்படுத்த ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் BrahMos Aerospace துணை தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags: Operation SindoorBrahmosBrahmos NG missilesIndian defense industryBrahmos Aerospacerussia
ShareTweetSendShare
Previous Post

தூய்மை பணியாளர் கைதின் போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

Related News

U-TURN அடித்த ட்ரம்ப் : மோடியின் நண்பராக இருப்பேன் என அறிவிப்பு – சிறப்பு கட்டுரை!

வேலூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

தூய்மை பணியாளர் கைதின் போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இமானுவேல் சேகரன் நினைவு தினம் – நயினார் நாகேந்திரன் மரியாதை!

பாரதியார் நினைவு தினம் – உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை!

போக்குவரத்து விதிமீறல் அபராத நிலுவை தொகையை கட்டினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் – போக்குவரத்து போலீசார் முடிவு என தகவல்!

அன்புமணியை நீக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்!

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies