பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா - இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!
Jun 15, 2026, 01:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 11, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ் மற்றும் பிரம்மோஸ் என்ஜி ஏவுகணை சோதனையில் ரஷ்யா ஆர்வம் காட்டுவதன் மூலம், இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்போம்.

இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் உருவானது பிரம்மோஸ் ஏவுகணை. நிலம், நீர் மற்றும் வான்பரப்பில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த பிரம்மோஸ் ஏவுகணை.

உலகில் எந்த வான் பாதுகாப்பு அமைப்பும் பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறிக்க முடியாது. இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் இது நிரூபிக்கப்பட்டது. இதனால் பல நாடுகள் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க அணுகியுள்ளன.

இந்த வரிசையில், ரஷ்யா தனது ஆயுதப் படைகளில் பிரம்மோஸின் அடுத்த தலைமுறை ஏவுகணையான ’பிரம்மோஸ்-என்ஜி’-யை சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.

பிரம்மோஸ்-என்ஜி என்பது பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட மற்றும் இலகு ரக வடிவமாகும். இது இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய சின்னமாக பார்க்கப்படுகிறது. இது அசல் பிரம்மோஸ் ஏவுகணையில் பாதியளவு எடை கொண்டது, இதனால் போர் விமானங்கள் அதிக ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும்.

பிற நாடுகள் காட்டும் ஆர்வத்தால் ஊக்கமடைந்திருக்கும் பிரம்மோஸ் ஏரோ-ஸ்பேஸ், தற்போது ஏவுகணையை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது உற்பத்தி செலவைக் குறைத்து, வாங்குவோர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 25 யூனிட்கள் மட்டுமே அதாவது சுமார் 1,000 பிரம்மோஸ் ஏவுகணைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது பிரம்மோஸின் அதிக தேவை காரணமாக உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன.

பொதுவாக பிரம்மோஸ் ஏவுகணை 3,000 கிலோ எடை கொண்டது. அதே நேரத்தில் விமானப்படையில் பயன்படுத்தக் கூடிய வகை 2,500 கிலோ எடை கொண்டது. பிரம்மோஸ்-என்ஜி சுமார் 1,250 கிலோ எடையுள்ளதாக இருக்கும் இது மிக்-29 மற்றும் எல்சிஏ தேஜாஸ் எம்கே-1 ஏ போன்ற இலகுவான போர் விமானங்களில் சுமந்து சென்று ஏவுவதற்கு ஏற்றது.

எண்ணற்ற சிறப்புகள் வாய்ந்த பிரம்மோஸ்-என்ஜியின் சோதனை 2026இல் தொடங்கும் என ஓய்வுபெற்ற ஜாகுவார் விமானி விஜயேந்திரா கே.தாக்கூர் தெரிவித்திருப்பதாக யூரேசியன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணையை ரஷ்யா பெறும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு BrahMos Aerospace துணை தலைமை நிர்வாக அதிகாரி Chilukoti Chandrasekhar தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகளின் விலையை குறைக்க இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து பணியாற்றி வருவதாகவும், இதன் மூலம் அதிகப்படியான ஏற்றுமதி ஒப்பந்தங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்றுமதியுடன் சேர்ந்து இந்தியாவின் ஆயுதப் படைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை விரிவாக்க வேண்டும் என்றும், அதற்கான திறன்களை மேம்படுத்த ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் BrahMos Aerospace துணை தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags: Brahmos NG missilesIndian defense industryBrahmos AerospacerussiaOperation SindoorBrahmos
ShareTweetSendShare
Previous Post

தூய்மை பணியாளர் கைதின் போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies