பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா - இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!
Sep 14, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 11, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரம்மோஸ் மற்றும் பிரம்மோஸ் என்ஜி ஏவுகணை சோதனையில் ரஷ்யா ஆர்வம் காட்டுவதன் மூலம், இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்போம்.

இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் உருவானது பிரம்மோஸ் ஏவுகணை. நிலம், நீர் மற்றும் வான்பரப்பில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த பிரம்மோஸ் ஏவுகணை.

உலகில் எந்த வான் பாதுகாப்பு அமைப்பும் பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறிக்க முடியாது. இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் இது நிரூபிக்கப்பட்டது. இதனால் பல நாடுகள் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க அணுகியுள்ளன.

இந்த வரிசையில், ரஷ்யா தனது ஆயுதப் படைகளில் பிரம்மோஸின் அடுத்த தலைமுறை ஏவுகணையான ’பிரம்மோஸ்-என்ஜி’-யை சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.

பிரம்மோஸ்-என்ஜி என்பது பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட மற்றும் இலகு ரக வடிவமாகும். இது இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய சின்னமாக பார்க்கப்படுகிறது. இது அசல் பிரம்மோஸ் ஏவுகணையில் பாதியளவு எடை கொண்டது, இதனால் போர் விமானங்கள் அதிக ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும்.

பிற நாடுகள் காட்டும் ஆர்வத்தால் ஊக்கமடைந்திருக்கும் பிரம்மோஸ் ஏரோ-ஸ்பேஸ், தற்போது ஏவுகணையை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது உற்பத்தி செலவைக் குறைத்து, வாங்குவோர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 25 யூனிட்கள் மட்டுமே அதாவது சுமார் 1,000 பிரம்மோஸ் ஏவுகணைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது பிரம்மோஸின் அதிக தேவை காரணமாக உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன.

பொதுவாக பிரம்மோஸ் ஏவுகணை 3,000 கிலோ எடை கொண்டது. அதே நேரத்தில் விமானப்படையில் பயன்படுத்தக் கூடிய வகை 2,500 கிலோ எடை கொண்டது. பிரம்மோஸ்-என்ஜி சுமார் 1,250 கிலோ எடையுள்ளதாக இருக்கும் இது மிக்-29 மற்றும் எல்சிஏ தேஜாஸ் எம்கே-1 ஏ போன்ற இலகுவான போர் விமானங்களில் சுமந்து சென்று ஏவுவதற்கு ஏற்றது.

எண்ணற்ற சிறப்புகள் வாய்ந்த பிரம்மோஸ்-என்ஜியின் சோதனை 2026இல் தொடங்கும் என ஓய்வுபெற்ற ஜாகுவார் விமானி விஜயேந்திரா கே.தாக்கூர் தெரிவித்திருப்பதாக யூரேசியன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணையை ரஷ்யா பெறும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு BrahMos Aerospace துணை தலைமை நிர்வாக அதிகாரி Chilukoti Chandrasekhar தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகளின் விலையை குறைக்க இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து பணியாற்றி வருவதாகவும், இதன் மூலம் அதிகப்படியான ஏற்றுமதி ஒப்பந்தங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்றுமதியுடன் சேர்ந்து இந்தியாவின் ஆயுதப் படைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை விரிவாக்க வேண்டும் என்றும், அதற்கான திறன்களை மேம்படுத்த ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் BrahMos Aerospace துணை தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags: Brahmos NG missilesIndian defense industryBrahmos AerospacerussiaOperation SindoorBrahmos
Share
Tweet
SendShare
Previous Post

தூய்மை பணியாளர் கைதின் போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies