நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் - தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!
Mar 15, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே நீர்நிலைகளுக்கு நடுவில் தமிழக அரசு அமைத்து வரும் மின் மயானத்திற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மொளசி அருகே உள்ளது முனியப்பம்பாளைம் என்ற கிராமம். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி காவிரி கரையோரம் உள்ளதால் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி கரையோரப் பகுதியில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றிலும் நீர்நிலைகள் உள்ளதால், புதிதாக அமைக்கப்படும் மின் மயானம் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நீர் நிலைகளுக்கு மத்தியில் மின் மயானத்தை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை மொளசி பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இருந்தபோதும், அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் பட்டா நிலம் நீரில் மூழ்கி வருவதாகவும், இதற்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நடைபாதை அமைத்து மின் மயானம் அமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே நடைபாதையில் உள்ள தடுப்பு சுவர்களில் நீர் அரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுகவினர் சொந்த லாபத்திற்திற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: tn govtConstruction of an electric cemetery in the middle of a water body - People demand to stop itமின் மயான கட்டுமானம்
ShareTweetSendShare
Previous Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

Next Post

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies