நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் - தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!
Sep 13, 2025, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே நீர்நிலைகளுக்கு நடுவில் தமிழக அரசு அமைத்து வரும் மின் மயானத்திற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மொளசி அருகே உள்ளது முனியப்பம்பாளைம் என்ற கிராமம். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி காவிரி கரையோரம் உள்ளதால் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி கரையோரப் பகுதியில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றிலும் நீர்நிலைகள் உள்ளதால், புதிதாக அமைக்கப்படும் மின் மயானம் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நீர் நிலைகளுக்கு மத்தியில் மின் மயானத்தை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை மொளசி பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இருந்தபோதும், அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் பட்டா நிலம் நீரில் மூழ்கி வருவதாகவும், இதற்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நடைபாதை அமைத்து மின் மயானம் அமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே நடைபாதையில் உள்ள தடுப்பு சுவர்களில் நீர் அரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுகவினர் சொந்த லாபத்திற்திற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: tn govtConstruction of an electric cemetery in the middle of a water body - People demand to stop itமின் மயான கட்டுமானம்
ShareTweetSendShare
Previous Post

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

Next Post

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Related News

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில்  4 நாட்களில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள்!

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு!

தவறான சிகிச்சையால் மூதாட்டி உயிரிழப்பு என புகார் – கிளினிக்கிற்கு சீல் வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies