நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து - நீர் கசிவு தான் காரணமா?
Sep 12, 2026, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்கு நீர்கசிவு காரணமாக இருக்கலாம் என, அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 260 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமான விபத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுவரை எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்த 110 பேரின் குடும்பத்தினர், ஏர் இந்தியா மற்றும் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான பீஸ்லி ஆலன் சார்பில் நடத்தப்படும் இந்த வழக்கில், மைக் ஆண்ட்ரூஸ் என்ற பிரபல வழக்கிறஞர் வாதாடி வருகிறார்.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனவும், விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கைப் பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விமானத்தின் வடிவமைப்பு இந்த விபத்துக்கு முக்கியான காரணமாக அமைந்திருக்குமோ எனவும் அவர்  சந்தேகம் தெரிவித்துள்ளார். கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நீர்க்கசிவு ஏற்பட்டு, மின்சாரப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் அவர், இது தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ள தகவல்களை மேற்கோள்காட்டியுள்ளார்.

நீர்க் கசிவுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்றால், விமானத்தை வடிவமைத்த போயிங் நிறுவனம்தான் அதற்கு பொறுப்பேற்ற வேண்டும் என வழக்கிறஞர் மைக் ஆண்ட்ரூஸ் வலியுறுத்தியுள்ளார். தனது சட்ட நிறுவனம் இன்னும் கூடுதல் ஆவணங்களைச் சேகரித்து வருவதாகவும், துறைச் சார்ந்த வல்லுநர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்த் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏர் இந்தியா இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இது தொடர்பாகப் பேசியிருந்த அவர், இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், ரத்தன் டாடா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், இத்தகைய சூழலே வந்திருக்காது எனவும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Indiaair india plane accidentThe Air India plane crash that shook the country - was it caused by a water leak?
Share
Tweet
SendShare
Previous Post

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

Next Post

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies