நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் - தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!
Sep 12, 2026, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் அருகே நீர்நிலைகளுக்கு நடுவில் தமிழக அரசு அமைத்து வரும் மின் மயானத்திற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மொளசி அருகே உள்ளது முனியப்பம்பாளைம் என்ற கிராமம். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி காவிரி கரையோரம் உள்ளதால் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி கரையோரப் பகுதியில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றிலும் நீர்நிலைகள் உள்ளதால், புதிதாக அமைக்கப்படும் மின் மயானம் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நீர் நிலைகளுக்கு மத்தியில் மின் மயானத்தை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை மொளசி பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இருந்தபோதும், அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் பட்டா நிலம் நீரில் மூழ்கி வருவதாகவும், இதற்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நடைபாதை அமைத்து மின் மயானம் அமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே நடைபாதையில் உள்ள தடுப்பு சுவர்களில் நீர் அரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுகவினர் சொந்த லாபத்திற்திற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: tn govtConstruction of an electric cemetery in the middle of a water body - People demand to stop itமின் மயான கட்டுமானம்
Share
Tweet
SendShare
Previous Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

Next Post

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies