சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் - பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மக்களை அச்சுறுத்தும் புதிய சவாலாக ஆப்பிரிக்க நத்தைகள் ஊடுருவியுள்ளன. விவசாயம் மற்றும் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை அழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் செயிண்ட் தாமஸ் மவுண்ட், திரிசூலம், பெருங்களத்தூர்  போன்ற சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே தென்பட்ட ஆப்பிரிக்க நத்தைகள் தற்போது நகரின் மையப் பகுதிகளான வேளச்சேரி, அடையார், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் தென்படத் தொடங்கியுள்ளது. 500க்கும் அதிகமான தாவர வகைகளை உண்டு வாழக்கூடிய இந்த ஆப்பிரிக்க நத்தைகள், பல்வேறு விதமான மூலிகைத் தாவரங்களையும் அழித்து உண்ணக்கூடிய ஆபத்துமிக்கதாகத் திகழ்கிறது.

ஆப்பிரிக்க நத்தைகளின் மூலம் அபாயகரமான கிருமிகள் உடலுக்குள் புகுந்தால் மூளை அழற்சி, வாந்தி, தலைவலி, காய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். காய்கறிகள் வாயிலாகவோ, மாசுபட்ட நீரின் மூலமாகவோ ஆப்பிரிக்க நத்தைகளின் கிருமிகள் பரவும் எனவும் கூறப்படுகிறது. அரசு விரைவில் ஆப்பிரிக்க நத்தைகளின் கணக்கெடுப்பை நடத்தி அவற்றைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பண்டங்களின் மூலமாக ஆப்பிரிக்க நத்தைகள் சென்னைக்குள் நுழைந்திருப்பதாகவும், அவைகள் குறுகிய காலத்திற்குள் இனப்பெருக்கம் செய்து தற்போது லட்சக்கணக்கான அளவிற்குப் பெருகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய சூழலில் ஆப்பிரிக்க நத்தைகளின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், அடுத்தடுத்து வரும் காலங்களில் இது பெரும் சவாலாக மாறும் என உயிரியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை உடனடியாகக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: சென்னைExperts warn that African snails that have invaded Chennai will become a major challengeஆப்பிரிக்க நத்தைகள்
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

Next Post

இசையுலகில் தமிழகத்திற்குப் பெருமை தேடி தந்தவர் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies