சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் - பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!
Sep 14, 2025, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Sep 14, 2025, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மக்களை அச்சுறுத்தும் புதிய சவாலாக ஆப்பிரிக்க நத்தைகள் ஊடுருவியுள்ளன. விவசாயம் மற்றும் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை அழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் செயிண்ட் தாமஸ் மவுண்ட், திரிசூலம், பெருங்களத்தூர்  போன்ற சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே தென்பட்ட ஆப்பிரிக்க நத்தைகள் தற்போது நகரின் மையப் பகுதிகளான வேளச்சேரி, அடையார், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் தென்படத் தொடங்கியுள்ளது. 500க்கும் அதிகமான தாவர வகைகளை உண்டு வாழக்கூடிய இந்த ஆப்பிரிக்க நத்தைகள், பல்வேறு விதமான மூலிகைத் தாவரங்களையும் அழித்து உண்ணக்கூடிய ஆபத்துமிக்கதாகத் திகழ்கிறது.

ஆப்பிரிக்க நத்தைகளின் மூலம் அபாயகரமான கிருமிகள் உடலுக்குள் புகுந்தால் மூளை அழற்சி, வாந்தி, தலைவலி, காய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். காய்கறிகள் வாயிலாகவோ, மாசுபட்ட நீரின் மூலமாகவோ ஆப்பிரிக்க நத்தைகளின் கிருமிகள் பரவும் எனவும் கூறப்படுகிறது. அரசு விரைவில் ஆப்பிரிக்க நத்தைகளின் கணக்கெடுப்பை நடத்தி அவற்றைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பண்டங்களின் மூலமாக ஆப்பிரிக்க நத்தைகள் சென்னைக்குள் நுழைந்திருப்பதாகவும், அவைகள் குறுகிய காலத்திற்குள் இனப்பெருக்கம் செய்து தற்போது லட்சக்கணக்கான அளவிற்குப் பெருகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய சூழலில் ஆப்பிரிக்க நத்தைகளின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், அடுத்தடுத்து வரும் காலங்களில் இது பெரும் சவாலாக மாறும் என உயிரியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை உடனடியாகக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: சென்னைExperts warn that African snails that have invaded Chennai will become a major challengeஆப்பிரிக்க நத்தைகள்
ShareTweetSendShare
Previous Post

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Next Post

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

Related News

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக – ஜெ.பி.நட்டா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies