ஜிலேபி பேபி எனப்படும் இந்தப் பாடல், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் தேசிய கீதத்திற்குப் பதிலாக ஒலிபரப்ப பட்டதால் அந்நாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்பட இருந்தது. அந்நாட்டு வீரர்களும் ரசிகர்களும் எழுந்து நின்று தேசிய கீதத்தைப் பாட தயாராகினார்.
அப்போது தேசிய கீதத்திற்குப் பதிலாக ஜிலேபி பேபி பாடல் தவறுதலாக ஒலிபரப்ப பட்டது. சில நிமிடங்கள் மட்டுமே கேட்ட அந்தப் பாடல் உடனடியாக நிறுத்தப்பட்டுப் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியைக் கலாய்த்து, ஜிலேபி பாடலை உருவாக்கிய டெஷர், இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜிலேபி பேபி பாடல் ஒரு கீதம் என்று நான் சொன்னபோது, இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
பழுதடைந்த பொருளைத் தூக்கி எறியாமல் அதைச் சரி செய்து பயன்படுத்தும் இந்தியர்களின் பழக்கத்தைக் கண்டு வியப்பதாக அமெரிக்கப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலநாடுகளில் ஒரு பொருள் பழுதடைந்துவிட்டால் அதனை மக்கள் தூக்கி எறிந்துவிட்டுப் புதிதாக வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இந்தியர்கள் அதனைப் பழுதுநீக்கி மீண்டும் பயன்படுத்துகின்றனர்.
இது, பணத்தைச் சேமிப்பது மட்டுமின்றிக் கழிவுகளை குறைக்கவும் உதவுகிறது. இதனை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் இந்தியாவில் வசிக்கும் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்பவர், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பழுதான கெட்டிலை சரிசெய்ய கடைக்காரர் 30 ரூபாய் மட்டுமே வசூலித்ததாகவும் பழுதடைந்த பொருளைத் தூக்கி எறியாமல் அதைச் சரி செய்து பயன்படுத்தும் இந்தியர்களின் பழக்கத்தைக் கண்டு வியப்பதாகவும் தெரிவித்துள்ளார்.