உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் - விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?
Sep 16, 2025, 09:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

Web Desk by Web Desk
Sep 16, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் உரிய விலைக் கிடைக்காமல் அரளிப்பூ செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடப்பதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன.

அதில் அரளி, நந்தியாவட்டம் பூக்கள் மட்டும் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், திருமண சீசன் முடிவதன் காரணமாக, இந்தப் பூக்கள் ஒரு கிலோவுக்கு 10 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை மட்டுமே விலைக் கிடைக்கிறது.

அதே வேளையில் பூக்களைப் பறிக்க வரும் ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் வரைக் கூலி கொடுக்க வேண்டி இருப்பதால் நஷ்டத்தைத் தவிர்க்க பூக்கள் பறிக்கும் பணியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.

தங்கள் உழைப்பின் பலனாக வளர்ந்த பூக்களுக்குச் சந்தையில் விலை இல்லாமல் போய்விட்டதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒருதரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செடிகளில் பூத்துக் குலுங்கிய அரளிப் பூக்கள் பறிக்கப்படாமல் மண்ணோடு மண்ணாகி கிடப்பது, உழைப்பும், முதலீடும் வீணான விவசாயிகளின் ரத்தத்தைக் கொந்தளிக்க செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி, பனமரத்துப்பட்டியில் மலர்ச் சந்தை அமைத்துக் கொடுத்து தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் இன்னொரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

விலைக் கிடைக்காமல் வீணாகும் அரளிப் பூக்களால், சேலம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இவர்களின் கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: தமிழக அரசுFlowers are falling off without getting the right price - will the Tamil Nadu government protect the livelihood of farmers?உதிர்ந்து விழும் பூக்கள்
ShareTweetSendShare
Previous Post

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

Next Post

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

Related News

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies