உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் - விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?
Jan 14, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் உரிய விலைக் கிடைக்காமல் அரளிப்பூ செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடப்பதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன.

அதில் அரளி, நந்தியாவட்டம் பூக்கள் மட்டும் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், திருமண சீசன் முடிவதன் காரணமாக, இந்தப் பூக்கள் ஒரு கிலோவுக்கு 10 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை மட்டுமே விலைக் கிடைக்கிறது.

அதே வேளையில் பூக்களைப் பறிக்க வரும் ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் வரைக் கூலி கொடுக்க வேண்டி இருப்பதால் நஷ்டத்தைத் தவிர்க்க பூக்கள் பறிக்கும் பணியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.

தங்கள் உழைப்பின் பலனாக வளர்ந்த பூக்களுக்குச் சந்தையில் விலை இல்லாமல் போய்விட்டதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒருதரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செடிகளில் பூத்துக் குலுங்கிய அரளிப் பூக்கள் பறிக்கப்படாமல் மண்ணோடு மண்ணாகி கிடப்பது, உழைப்பும், முதலீடும் வீணான விவசாயிகளின் ரத்தத்தைக் கொந்தளிக்க செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி, பனமரத்துப்பட்டியில் மலர்ச் சந்தை அமைத்துக் கொடுத்து தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் இன்னொரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

விலைக் கிடைக்காமல் வீணாகும் அரளிப் பூக்களால், சேலம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இவர்களின் கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: தமிழக அரசுFlowers are falling off without getting the right price - will the Tamil Nadu government protect the livelihood of farmers?உதிர்ந்து விழும் பூக்கள்
ShareTweetSendShare
Previous Post

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

Next Post

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

Related News

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies