'அரபு - இஸ்லாமிய நேட்டோ' உருவாக்க யோசனை... - இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?
Jan 14, 2026, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின் அங்கு கூடிய 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள், ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்கம் குறித்த யோசனையை முன்வைத்தன. இந்த முயற்சி இந்தியாவிற்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அதுபற்றி விரிவாக விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு…

கத்தாரில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி ஹமாஸ் தலைவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீத இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைப் பாதுகாப்பு நடவடிக்கை எனக் குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தீவிரவாதிகளுக்குத் தங்குமிடம் அளிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை இஸ்ரேல் மேற்கொள்ளும் என எச்சரித்தார்.

இந்த நிகழ்வுக்குப் பின் கத்தார் தலைநகர் டோஹாவில் பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்திய 40-க்கும் மேற்பட்ட அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேலின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

குறிப்பாகக் கத்தார் எமீர் தமிம் பின் ஹமத் அல்தானி, காசாவை வாழ முடியாத நிலைக்கு இஸ்ரேல் தள்ளுவதாகக் குற்றம் சாட்டினார். துருக்கி அதிபர் எர்டோகானும் இஸ்ரேலை பொருளாதார ரீதியில் ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதே வேளையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கை தேவை என எகிப்து, ஈரான், ஈராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் எடுத்துரைத்தன.

இந்த மாநாட்டில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஈஷாக் தார் ஆகியோர், இஸ்ரேலின் திட்டங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த படை அவசியம் எனத் தெரிவித்தனர். அதனடிப்படையில் ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ என்ற புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்கும் யோசனையை, மாநாட்டில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஆதரித்தன.

இந்நிலையில், பாகிஸ்தானின் பங்களிப்பு மற்றும் துருக்கியின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி இந்தியாவின் பாதுகாப்பிற்குப் புதிய சவால்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்னையை மீண்டும் உலக அரங்கில் எழுப்ப வாய்ப்புள்ளதால், இது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாகக் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மற்ற அனைத்து நாடுகளும் இணைந்து நேட்டோ பாணியில் எதிர்த்தாக்குதல் நடத்தும் என்பதால், இந்தக் கூட்டமைப்பு உருவாவது இந்தியாவிற்கு அசாதாரண சூழலை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

மற்றொருபுறம், இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவு தற்போது வலுப்பெற்றுள்ள நிலையில், புதிதாக உருவாகவுள்ள ராணுவ கூட்டமைப்பின் பார்வையில் இந்தியா, இஸ்ரேல் பக்கம் நிற்பதாகத் தோன்றும் அபாயமும் உள்ளது. இந்தச் சூழலில், ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ என்ற ராணுவ கூட்டமைப்பு உருவாக்கம் தற்போது வெறும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்தாலும், அதன் எதிர்கால முன்னேற்றங்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள்இஸ்லாமிய நாடுகள்Indiatoday newsThe idea of ​​creating an 'Arab-Islamic NATO'... - What are the new challenges facing India?அரபு - இஸ்லாமிய நேட்டோ
ShareTweetSendShare
Previous Post

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Next Post

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies