'அரபு - இஸ்லாமிய நேட்டோ' உருவாக்க யோசனை... - இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?
Nov 3, 2025, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

Web Desk by Web Desk
Sep 17, 2025, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின் அங்கு கூடிய 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள், ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்கம் குறித்த யோசனையை முன்வைத்தன. இந்த முயற்சி இந்தியாவிற்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அதுபற்றி விரிவாக விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு…

கத்தாரில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி ஹமாஸ் தலைவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீத இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைப் பாதுகாப்பு நடவடிக்கை எனக் குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தீவிரவாதிகளுக்குத் தங்குமிடம் அளிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை இஸ்ரேல் மேற்கொள்ளும் என எச்சரித்தார்.

இந்த நிகழ்வுக்குப் பின் கத்தார் தலைநகர் டோஹாவில் பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்திய 40-க்கும் மேற்பட்ட அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேலின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

குறிப்பாகக் கத்தார் எமீர் தமிம் பின் ஹமத் அல்தானி, காசாவை வாழ முடியாத நிலைக்கு இஸ்ரேல் தள்ளுவதாகக் குற்றம் சாட்டினார். துருக்கி அதிபர் எர்டோகானும் இஸ்ரேலை பொருளாதார ரீதியில் ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதே வேளையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கை தேவை என எகிப்து, ஈரான், ஈராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் எடுத்துரைத்தன.

இந்த மாநாட்டில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஈஷாக் தார் ஆகியோர், இஸ்ரேலின் திட்டங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த படை அவசியம் எனத் தெரிவித்தனர். அதனடிப்படையில் ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ என்ற புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்கும் யோசனையை, மாநாட்டில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஆதரித்தன.

இந்நிலையில், பாகிஸ்தானின் பங்களிப்பு மற்றும் துருக்கியின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி இந்தியாவின் பாதுகாப்பிற்குப் புதிய சவால்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்னையை மீண்டும் உலக அரங்கில் எழுப்ப வாய்ப்புள்ளதால், இது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாகக் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மற்ற அனைத்து நாடுகளும் இணைந்து நேட்டோ பாணியில் எதிர்த்தாக்குதல் நடத்தும் என்பதால், இந்தக் கூட்டமைப்பு உருவாவது இந்தியாவிற்கு அசாதாரண சூழலை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

மற்றொருபுறம், இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவு தற்போது வலுப்பெற்றுள்ள நிலையில், புதிதாக உருவாகவுள்ள ராணுவ கூட்டமைப்பின் பார்வையில் இந்தியா, இஸ்ரேல் பக்கம் நிற்பதாகத் தோன்றும் அபாயமும் உள்ளது. இந்தச் சூழலில், ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ என்ற ராணுவ கூட்டமைப்பு உருவாக்கம் தற்போது வெறும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்தாலும், அதன் எதிர்கால முன்னேற்றங்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள்இஸ்லாமிய நாடுகள்Indiatoday newsThe idea of ​​creating an 'Arab-Islamic NATO'... - What are the new challenges facing India?அரபு - இஸ்லாமிய நேட்டோ
ShareTweetSendShare
Previous Post

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Next Post

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

Related News

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

மகனை பிரதமராக்கும் சோனியாவின் கனவு ஈடேறாது – மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

S.I.R என்பதற்கு பொருள் தெரியாமல் பேசும் உதயநிதி – தமிழிசை சௌந்தரராஜன்

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies