'அரபு - இஸ்லாமிய நேட்டோ' உருவாக்க யோசனை... - இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?
Jul 31, 2026, 02:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின் அங்கு கூடிய 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள், ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்கம் குறித்த யோசனையை முன்வைத்தன. இந்த முயற்சி இந்தியாவிற்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அதுபற்றி விரிவாக விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு…

கத்தாரில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி ஹமாஸ் தலைவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீத இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைப் பாதுகாப்பு நடவடிக்கை எனக் குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தீவிரவாதிகளுக்குத் தங்குமிடம் அளிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை இஸ்ரேல் மேற்கொள்ளும் என எச்சரித்தார்.

இந்த நிகழ்வுக்குப் பின் கத்தார் தலைநகர் டோஹாவில் பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்திய 40-க்கும் மேற்பட்ட அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேலின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

குறிப்பாகக் கத்தார் எமீர் தமிம் பின் ஹமத் அல்தானி, காசாவை வாழ முடியாத நிலைக்கு இஸ்ரேல் தள்ளுவதாகக் குற்றம் சாட்டினார். துருக்கி அதிபர் எர்டோகானும் இஸ்ரேலை பொருளாதார ரீதியில் ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதே வேளையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கை தேவை என எகிப்து, ஈரான், ஈராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் எடுத்துரைத்தன.

இந்த மாநாட்டில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஈஷாக் தார் ஆகியோர், இஸ்ரேலின் திட்டங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த படை அவசியம் எனத் தெரிவித்தனர். அதனடிப்படையில் ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ என்ற புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்கும் யோசனையை, மாநாட்டில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஆதரித்தன.

இந்நிலையில், பாகிஸ்தானின் பங்களிப்பு மற்றும் துருக்கியின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி இந்தியாவின் பாதுகாப்பிற்குப் புதிய சவால்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்னையை மீண்டும் உலக அரங்கில் எழுப்ப வாய்ப்புள்ளதால், இது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாகக் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மற்ற அனைத்து நாடுகளும் இணைந்து நேட்டோ பாணியில் எதிர்த்தாக்குதல் நடத்தும் என்பதால், இந்தக் கூட்டமைப்பு உருவாவது இந்தியாவிற்கு அசாதாரண சூழலை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

மற்றொருபுறம், இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவு தற்போது வலுப்பெற்றுள்ள நிலையில், புதிதாக உருவாகவுள்ள ராணுவ கூட்டமைப்பின் பார்வையில் இந்தியா, இஸ்ரேல் பக்கம் நிற்பதாகத் தோன்றும் அபாயமும் உள்ளது. இந்தச் சூழலில், ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ என்ற ராணுவ கூட்டமைப்பு உருவாக்கம் தற்போது வெறும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்தாலும், அதன் எதிர்கால முன்னேற்றங்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள்இஸ்லாமிய நாடுகள்Indiatoday newsThe idea of ​​creating an 'Arab-Islamic NATO'... - What are the new challenges facing India?அரபு - இஸ்லாமிய நேட்டோ
ShareTweetSendShare
Previous Post

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Next Post

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

Related News

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies