கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!
Jan 14, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம், செல்லூரில் கழிவுநீர்  கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, தெருக்களில் கழிவு நீர்  தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை  தற்போது காணலாம்…

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 23 மற்றும் 24-வது வார்டுகளில் அமைந்துள்ள எம்ஜிஆர்  தெரு, தியாகி பாலு தெரு, இந்திரா நகர், போஸ் வீதி மெயின் ரோடு, ஜீவானந்தம் தெரு, மணவாளநகர் போன்ற பகுதிகளில், பல மாதங்களாகக் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர்த் தேங்கி கிடக்கிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர்  தேங்கி கிடப்பதால் உணவு உட்கொள்ளவோ, இரவில் தூங்கவோ கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை  தெரிவித்துள்ளனர்.

குறிப்பாகக் குழந்தைகளின் உடல்நிலை அடிக்கடி பாதிப்பிற்குள்ளாவதாகவும், 2 நாட்கள் பள்ளிக்குச் சென்றால் அடுத்த 3 நாட்கள் விடுப்பு எடுக்கும் சூழல் உள்ளதாகவும் பெற்றோர்க் கவலை தெரிவித்துள்ளனர்.

கழிவுநீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்து, தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், ஏராளமான குடும்பங்கள் தங்கள் சோந்த வீடுகளை விட்டு வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். ஆறாக ஓடும் கழிவுநீரைக் கண்டு தங்கள் வீடுகளுக்கு வர உறவினர்கள் அஞ்சுவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் பகுதியை தற்காலிகமாக சுத்தம் செய்கின்றனரே தவிர, தங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கொடுக்க அவர்கள் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட சிறிய பைப்புகள் தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பால் போதவில்லை எனக் கூறும் செல்லூர் பகுதி மக்கள், கடந்த 5 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகம் வர சென்று மனு அளித்தும் தங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒரு நிரந்தரத் தீர்வு கொடுக்கவில்லை எனக் கதறும் அப்பகுதி மக்கள், தங்களது துயரத்தை ஒரு நாளில் சொல்லி மாளாது என விரக்தி நிறைந்த முகத்துடன் வேதனையை வெளிப்படுத்தினர்.

இந்தக் கழிவுநீர் கால்வாய் அடைப்பு பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என செல்லூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தவறும் பட்சத்தில் தங்கள் பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: MaduraiRoads flooded with sewage: The plight of people leaving their homesகழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள்
ShareTweetSendShare
Previous Post

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Next Post

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies