நவராத்திரி விழா கொண்டாட்டம்... - சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை....!
Sep 18, 2025, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

Web Desk by Web Desk
Sep 18, 2025, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் ராஜாஜி காதி பவனில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனைக் களைகட்டியுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு…

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி விழா. மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரனுடன் 9 நாட்கள் கடும் போர் புரிந்த ஆதிபராசக்தி, அந்த அசுரனை 10-வது நாளில் வதம் செய்தார். மக்களைப் பெருங்களிப்பில் ஆழ்த்திய இந்த வெற்றியையே மக்கள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நவராத்திரி விழாவையொட்டி மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது வாடிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா நாடு முழுவதும் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 1-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், நவராத்திரி விழாவையொட்டி சேலம் மாவட்டத்திலுள்ள ராஜாஜி காதி பவனில் கொலுபொம்மை விற்பனை களைகட்டியுள்ளது. இதனால் பல வகையான கொலு பொம்மைகளை வாங்கிச் செல்ல அங்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இங்கு விற்கப்படும் பொம்மைகள் அனைத்தும் கைவினைக் கலைஞர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டவை என்பது தனிச் சிறப்பு. அதன் காரணமாகவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து கொலு பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாக ஏராளமான தாய்மார்கள் அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளுக்குக் கொலு பொம்மைகளை இங்கிருந்து வாங்கி அனுப்பி வருகின்றனர்.

வெளிநாடு மட்டுமின்றிப் பெங்களூர், ஓசூர், ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கும், இங்கிருந்து அதிக அளவில் பொம்மைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆண்டு துவக்கத்திலேயே ராஜாஜி காதி பவனில் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால் அதீத மகிழ்ச்சியில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவராத்திரி கொண்டாட்டத்தில் மக்கள் மனதில் மகிழ்ச்சியை பரப்பும் சேலம் ராஜாஜி காதி பவனின் கொலு பொம்மைகள், கைவினை கலைஞர்களின் திறமையையும், வாழ்வாதாரத்தையும் உலகளவில் காட்சிப்படுத்தியிருக்கின்றன என்றால் மிகையில்லை.

Tags: Navratri festival celebration... - Hot sale of Kolu dolls....!நவராத்திரி விழா கொண்டாட்டம்கொலு பொம்மை விற்பனை
ShareTweetSendShare
Previous Post

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு – சிசிடிவி காட்சி!

Next Post

நாட்றம்பள்ளி – ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!

Related News

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் கால்வாய் பணி : மண்ணில் புதைந்த கட்டடங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies