தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!
Jun 4, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே தீவை இரு நாடுகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி மாற்றிப்பயன்படுத்தும் விநோதம் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா.. அப்படியொரு விநோதத் தீவு எங்கிருக்கிறது… எந்தெந்த நாடுகள் அப்படி அதிசய ஒப்பந்தத்தைப் போட்டிருக்கின்றன என்பதைப் பற்றி பார்க்கலாம்…

அமைதியாகப் பாயும் இந்தப் பிடோசோவா நதிதான் ஸ்பெயின், பிரான்ஸைப் பிரிக்கும் எல்லைக்கோடு. 360 ஆண்டுகள் பழமையான ரகசியத்தைத் தாங்கிக் கொண்டு அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் தனித்து நிற்கிறது இந்த ஃபெசன்ட் தீவு. 6 மாதங்களுக்கு ஒருமுறை ஸ்பெயினும், அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிரான்சும் ஃபெசன்ட் தீவை மாற்றி மாற்றி 350 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகம் செய்து வருவது பலரையும் வியக்க வைக்கிறது.

டர்க்கைஸ் நீர் இல்லை, ஆடம்பர வில்லாக்கள் இல்லை, உங்கள் முழங்கைகளை மடக்கி ஓய்வெடுக்க ஒரு கஃபே கூட இல்லை.. ஆனாலும் ஃபெசன்ட் தீவு என்று அழைக்கப்படும் இந்தச் சிறிய தீவு, அரசத் திருமணங்கள், அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் உலகின் விசித்திரமான எல்லை வரையறைகளின் ஒன்றாக ஒளி வீசி வருகிறது.

பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, முற்றுப்புள்ளியாக நிற்பதுதான் ஃபெசன்ட் தீவின் அடையாளம்..
பிரான்சும், ஸ்பெயினும் இந்தத் தீவை முற்றிலுமாக விட்டுக்கொடுக்க விரும்பாத நிலையில், எளிமையான, அதே நேரத்தில் அசாதாரணமான ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டன.

1659ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட (Pyrenees) பைரனீஸ் ஒப்பந்தத்தின்படி ஃபெசன்ட் தீவை இருநாடுகளும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் மாறி மாறி நிர்வகித்து வருகிறது. இதே நிலை இன்னமும், எவ்விதச் சலசலப்பும் இல்லாமல் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது…

இந்தத் தீவுக்குச் செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதியில்லையாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறைத் தீவை ஒப்படைக்கும் சடங்கு நிகழ்வு மற்றும் பராமரிப்புக்காக மட்டும், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸை நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தத் தீவில் கால் பதிப்பார்களாம்..

பிரான்ஸின் 14ம் லூயிஸ் மற்றும் ஸ்பெயினின் மரியா தெரசா ஆகியோரின் திருமணம் இந்தத் தீவில்தான் நடத்தப்பட்டது. பின்னாளில் இது அமைதியை நிலைநாட்டுவதற்கான இடமாக, அடையாளமாக மாறியது. மணல் நிறைந்த கடற்கரைகள், பாஸ்க் கட்டடக்கலைக் கொண்ட பிரான்ஸின் ஹெண்டே முதல், வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய நகரமான, திக்குமுக்காட செய்யும் சந்தையைக் கொண்ட இருன் நகரம் வரை ஃபெசன்ட் தீவுப் பகுதி கைக் கோர்த்து நிற்கிறது.

ஒரு காலத்தில் ஐரோப்பிய ராஜதந்திரத்தின் சுமையைச் சுமந்த அமைதியான தீவு, பல ஆண்டுகால வரலாற்றைச் சுமந்து கொண்டு இன்று அல்ல என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

Tags: Only one island belongs to both countries: an island that holds a 360-year-old secretதீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தம்விநோதத் தீவுபிடோசோவா நதிதான் ஸ்பெயின்பிரான்ஸைப் பிரிக்கும் எல்லைக்கோடு
ShareTweetSendShare
Previous Post

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

Next Post

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies