தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!
Sep 13, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரே தீவை இரு நாடுகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி மாற்றிப்பயன்படுத்தும் விநோதம் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா.. அப்படியொரு விநோதத் தீவு எங்கிருக்கிறது… எந்தெந்த நாடுகள் அப்படி அதிசய ஒப்பந்தத்தைப் போட்டிருக்கின்றன என்பதைப் பற்றி பார்க்கலாம்…

அமைதியாகப் பாயும் இந்தப் பிடோசோவா நதிதான் ஸ்பெயின், பிரான்ஸைப் பிரிக்கும் எல்லைக்கோடு. 360 ஆண்டுகள் பழமையான ரகசியத்தைத் தாங்கிக் கொண்டு அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் தனித்து நிற்கிறது இந்த ஃபெசன்ட் தீவு. 6 மாதங்களுக்கு ஒருமுறை ஸ்பெயினும், அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிரான்சும் ஃபெசன்ட் தீவை மாற்றி மாற்றி 350 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகம் செய்து வருவது பலரையும் வியக்க வைக்கிறது.

டர்க்கைஸ் நீர் இல்லை, ஆடம்பர வில்லாக்கள் இல்லை, உங்கள் முழங்கைகளை மடக்கி ஓய்வெடுக்க ஒரு கஃபே கூட இல்லை.. ஆனாலும் ஃபெசன்ட் தீவு என்று அழைக்கப்படும் இந்தச் சிறிய தீவு, அரசத் திருமணங்கள், அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் உலகின் விசித்திரமான எல்லை வரையறைகளின் ஒன்றாக ஒளி வீசி வருகிறது.

பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, முற்றுப்புள்ளியாக நிற்பதுதான் ஃபெசன்ட் தீவின் அடையாளம்..
பிரான்சும், ஸ்பெயினும் இந்தத் தீவை முற்றிலுமாக விட்டுக்கொடுக்க விரும்பாத நிலையில், எளிமையான, அதே நேரத்தில் அசாதாரணமான ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டன.

1659ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட (Pyrenees) பைரனீஸ் ஒப்பந்தத்தின்படி ஃபெசன்ட் தீவை இருநாடுகளும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் மாறி மாறி நிர்வகித்து வருகிறது. இதே நிலை இன்னமும், எவ்விதச் சலசலப்பும் இல்லாமல் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது…

இந்தத் தீவுக்குச் செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதியில்லையாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறைத் தீவை ஒப்படைக்கும் சடங்கு நிகழ்வு மற்றும் பராமரிப்புக்காக மட்டும், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸை நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தத் தீவில் கால் பதிப்பார்களாம்..

பிரான்ஸின் 14ம் லூயிஸ் மற்றும் ஸ்பெயினின் மரியா தெரசா ஆகியோரின் திருமணம் இந்தத் தீவில்தான் நடத்தப்பட்டது. பின்னாளில் இது அமைதியை நிலைநாட்டுவதற்கான இடமாக, அடையாளமாக மாறியது. மணல் நிறைந்த கடற்கரைகள், பாஸ்க் கட்டடக்கலைக் கொண்ட பிரான்ஸின் ஹெண்டே முதல், வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய நகரமான, திக்குமுக்காட செய்யும் சந்தையைக் கொண்ட இருன் நகரம் வரை ஃபெசன்ட் தீவுப் பகுதி கைக் கோர்த்து நிற்கிறது.

ஒரு காலத்தில் ஐரோப்பிய ராஜதந்திரத்தின் சுமையைச் சுமந்த அமைதியான தீவு, பல ஆண்டுகால வரலாற்றைச் சுமந்து கொண்டு இன்று அல்ல என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

Tags: பிரான்ஸைப் பிரிக்கும் எல்லைக்கோடுOnly one island belongs to both countries: an island that holds a 360-year-old secretதீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தம்விநோதத் தீவுபிடோசோவா நதிதான் ஸ்பெயின்
Share
Tweet
SendShare
Previous Post

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

Next Post

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies