ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்!
Jan 14, 2026, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மை  பணியாளர்கள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அதை விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை  தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் காவல்துறையால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை விடுவிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ் ரமேஷ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையமாக ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டது.

தொடர்ந்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை  சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு தலைமையிலான அமர்வு ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்த வழங்கிய உத்தரவை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒரு நபர் ஆணையம் குறித்த எந்தவொரு கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் இருதரப்பிடமும் விசாரணை நடத்தும் வகையிலேயே ஒரு நபர் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்துவதை எண்ணி அரசு தரப்பு ஏன் அச்சப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது காவல்துறை  தரப்பில், நீதிமன்றம் ஒரு நபர் ஆணைய உத்தரவை உறுதி செய்வதாக இருந்தால் வேறு ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, ஒரு நபர் ஆணையம் தொடர்ந்து விசாரணை  தொடர அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்One-person commission allowed to continue investigation - Madras High Court
ShareTweetSendShare
Previous Post

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்!

Next Post

தமிழகத்தில் உள்ள 4 அரசு மருந்தியல் கல்லுாரிகளில் 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு!

Related News

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies