ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்!
Nov 6, 2025, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Sep 20, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மை  பணியாளர்கள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அதை விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை  தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் காவல்துறையால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை விடுவிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ் ரமேஷ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையமாக ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டது.

தொடர்ந்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை  சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு தலைமையிலான அமர்வு ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்த வழங்கிய உத்தரவை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒரு நபர் ஆணையம் குறித்த எந்தவொரு கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் இருதரப்பிடமும் விசாரணை நடத்தும் வகையிலேயே ஒரு நபர் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்துவதை எண்ணி அரசு தரப்பு ஏன் அச்சப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது காவல்துறை  தரப்பில், நீதிமன்றம் ஒரு நபர் ஆணைய உத்தரவை உறுதி செய்வதாக இருந்தால் வேறு ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, ஒரு நபர் ஆணையம் தொடர்ந்து விசாரணை  தொடர அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்One-person commission allowed to continue investigation - Madras High Court
ShareTweetSendShare
Previous Post

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்!

Next Post

தமிழகத்தில் உள்ள 4 அரசு மருந்தியல் கல்லுாரிகளில் 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு!

Related News

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

டிரம்பின் வரிவிதிப்பு சட்டப்படி சரியானதா? : அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் கேள்வியால் வெடித்த சர்ச்சை!

“பயனர்களின் உரிமையை பாதுகாக்க போராட்டம்” – AMAZON Vs PERPLEXITY மோதும் ஜாம்பவான்கள்!

ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies