இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!
Jan 13, 2026, 11:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

Murugesan M by Murugesan M
Sep 26, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ரயிலில் இருந்து காற்றை கிழித்துக் கொண்டு சீறிப்பாய்ந்த இந்த ஏவுகணைதான் அக்னி-பிரைம்….பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி ஏவுகணைகள்,. கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றி வருகின்றன.

அதனை எதிர்காலத்திற்கு ஏற்ப, அடுத்த தலைமுறை ஏவுகணைகளாக மெருகேற்றி வருகிறது DRDO… அந்த வகையில் 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட, கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது இந்தியா.

அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி இந்தியா ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ள நிலையில், DRDO மற்றும் பாதுகாப்பு படையினரை மனமுவந்து பாராட்டியுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். பல்வேறு மேம்பட்ட அம்சங்களை கொண்ட அக்னி-பிரைம் ஏவுகணை, இதற்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்பு ரயில் லாஞ்சர் மூலம் ஏவப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித தடையும் இன்றி எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக் கூடிய அக்னி-பிரைம் ஏவுகணை தெரிவு நிலை குறைந்த பகுதியிலும், குறுகிய நேரத்திலும் எதிர்வினையாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய DRDO மற்றும் ஆயுத படைகளுக்கு வாழ்த்துகள் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

மேலும் இந்த வெற்றிகரமான சோதனை, நகரும் ரயில் ஏவுதளத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி ஏவுகணைகளில் பல வகைகள் உள்ளன. அதில் சில ஏவுகணைகள் 3500 கிலோ மீட்டர் முதல் 5000 கிலோ மீட்டர் தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது மட்டுமல்லாமல், எங்கு தேவையோ அங்கு கொண்டு சென்று பயன்படுத்த முடியும் என்பதுதான் அக்னி ஏவுகணைகளின் சிறப்பம்சமே..!

அக்னி-பிரைம் போன்ற பெரும்பலான மேம்பட்ட ஏவுகணைகளை ஆங்காங்கே நகர்த்துவது சுலபமானது அல்ல. எனவேதான் அவை வழிவழியாக நிலையான ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகின்றன. ஆனால், ரயில் லாஞ்சர் தொழில்நுட்பமோ, ஏவுகணைகளை எங்கும் எளிதில் எடுத்துச் சென்று இலக்குகளை குறிவைக்கும் தேர்வை இந்திய ராணுவத்திற்கு வழங்குகிறது.

ஏவுகணைகளை ஒரே இடத்தில் வைத்திருப்பதன் மூலம் அவை தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய அபாயம் உள்ளதாகக் கூறும் பாதுகாப்பு நிபுணர்கள், அவற்றை நகரும் வாகனங்களுக்கு மாற்றுவது முன்கூட்டியே தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பைக் குறைப்பதாகவும் கூறுகின்றனர்.

நாட்டின் தற்போதைய ரயில் வலையமைப்பின் காரணமாக, தேவைப்படும் நேரங்களில் ஏவுகணைகளை விரைவாக அணிதிரட்ட முடியும். செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து சுரங்கப்பாதைகளில் அவற்றை மறைத்து வைக்கவும் முடியும்… உண்மையில் ரயில் லாஞ்சர் தொழில்நுட்பம் பனிப்போர் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

அப்போதைய சோவியத் யூனியனும், அமெரிக்காவும் ரயிலில் இருந்து ஏவுகணை ஏவும் திட்டத்தை பற்றிய முன் முயற்சிகளை மேற்கொண்டன. 1950-களில் அமெரிக்கா Minuteman ஏவுகணைகளை, ரயிலில் இருந்து செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது.

1961ம் ஆண்டு அந்த முயற்சியை கைவிட்டது. 1980ம் ஆண்டுகளில் ரயில் மொபைல் லாஞ்சர்களில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை நிலைநிறுத்தும் திட்டத்தை மீண்டும் பரிசீலித்தது. எனினும் சோவியத் யூனியன் உடைந்த பிறகு இத்திட்டத்தை ரத்து செய்தது. இதே போன்று ரஷ்யாவும் RT-23 Molodets என்ற அமைப்பை ரயிலில் நிலைநிறுத்தியது. சோவியூத் யூனியன் உடைந்த பின்னர், ஆயுதக்குறைப்பு ஒபந்தத்தின்படி, அவைகள் அகற்றப்பட்டன.

இதே போன்று 2016ம் ஆண்டு DF-41 ரயில் மொபைல் லாஞ்சரை ரஷ்யா சோதித்ததாகவும், வடகொரியாவும் குறுகியதூர ஏவுகணைகளை ரயிலில் இருந்து ஏவி சோதனை மேற்கொண்டதாகவும் தகவல் செய்திகள் வெளியானது. சீனா, பாகிஸ்தான் நாடுகளில் உள்ள எந்த இலக்கையும் அக்னி ஏவுகணைகளால் குறிவைக்க முடியும்.

கடலுக்கு அடியில் அணுஆயுதங்களை சுமந்து கொண்டு தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், தரைப்பரப்பு, வான்பரப்பு மட்டுமன்றி தற்போது ரயில் லாஞ்சர் மூலமாகவும் பரிசோதிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது.

Tags: PM ModinewsRajnath Singhindian armydrdoTodayIndian Army's new record: Agni-Prime fired from a train
ShareTweetSendShare
Previous Post

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Next Post

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies