தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!
Jan 14, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 26, 2025, 08:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்காலக்குடி, சூரக்குண்டு, கீழையூர், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, அலுவலங்களில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர், மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, பள்ளிமடம், காரேந்தல், தமிழ்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. வடிகால் வசதி இல்லாததால் திருச்சுழி – அருப்புக்கோட்டை சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் தேனி நகர பகுதிகளான அரண்மனை புதூர், அல்லிநகரம், அன்னஞ்ஜி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேங்கிக்கால், ஆடையூர், அத்தியந்தல், புனல்காடு உள்ளிட்ட இடங்களில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தற்போது பெய்த மழையால் அங்கு வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொண்டமநாயக்கன்பட்டி, சண்முகசுந்தரபுரம், கரிசல்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தற்போது பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும், இதனால் மானாவாரி பயிர்கள் நன்கு வளரும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர் மழையால் கன்னியாகுமரி நகர் பகுதியில் உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மேம்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical depttailnadu raintamilnadu rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்!

Next Post

விமானப்படைக்கு 97 தேஜஸ் Mk-1A போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies