தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!
Nov 11, 2025, 07:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Sep 26, 2025, 08:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்காலக்குடி, சூரக்குண்டு, கீழையூர், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, அலுவலங்களில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர், மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, பள்ளிமடம், காரேந்தல், தமிழ்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. வடிகால் வசதி இல்லாததால் திருச்சுழி – அருப்புக்கோட்டை சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் தேனி நகர பகுதிகளான அரண்மனை புதூர், அல்லிநகரம், அன்னஞ்ஜி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேங்கிக்கால், ஆடையூர், அத்தியந்தல், புனல்காடு உள்ளிட்ட இடங்களில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தற்போது பெய்த மழையால் அங்கு வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொண்டமநாயக்கன்பட்டி, சண்முகசுந்தரபுரம், கரிசல்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தற்போது பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும், இதனால் மானாவாரி பயிர்கள் நன்கு வளரும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர் மழையால் கன்னியாகுமரி நகர் பகுதியில் உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மேம்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical depttailnadu raintamilnadu rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்!

Next Post

விமானப்படைக்கு 97 தேஜஸ் Mk-1A போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!

Related News

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெல்லி கார் குண்டு நிகழ்ந்த இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கொத்து கொத்தாக கொலை செய்ய திட்டம் : வெள்ளை “கோட்” தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

விசில்தான் எங்கள் மூச்சு! விசில்தான் எங்கள் பேச்சு : இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமமா?

களையிழந்த லாஸ் வேகாஸ் : காற்று வாங்கும் கேசினோ விடுதிகள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு – நெகிழ்ச்சியில் மக்கள்!

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies