தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 26, 2025, 08:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்காலக்குடி, சூரக்குண்டு, கீழையூர், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, அலுவலங்களில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர், மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, பள்ளிமடம், காரேந்தல், தமிழ்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. வடிகால் வசதி இல்லாததால் திருச்சுழி – அருப்புக்கோட்டை சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் தேனி நகர பகுதிகளான அரண்மனை புதூர், அல்லிநகரம், அன்னஞ்ஜி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேங்கிக்கால், ஆடையூர், அத்தியந்தல், புனல்காடு உள்ளிட்ட இடங்களில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தற்போது பெய்த மழையால் அங்கு வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொண்டமநாயக்கன்பட்டி, சண்முகசுந்தரபுரம், கரிசல்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தற்போது பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும், இதனால் மானாவாரி பயிர்கள் நன்கு வளரும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர் மழையால் கன்னியாகுமரி நகர் பகுதியில் உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மேம்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical depttailnadu raintamilnadu rainimdheavy rainrain alert
Share
Tweet
SendShare
Previous Post

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்!

Next Post

விமானப்படைக்கு 97 தேஜஸ் Mk-1A போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies