தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!
Jan 14, 2026, 03:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

Murugesan M by Murugesan M
Sep 26, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்துறையில் லட்சக்கணக்கான ரோபோக்களை களமிறக்கி அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது சீனா. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்….

சீனா… தொழில்நுட்ப பயன்பாடு என்று வந்துவிட்டால் எப்போதும் போட்டி போட்டு முன்னிலை வகிக்கும். இனி தொழில்நுட்பம் தான் உலகை நகர்த்தும் என்பதை துல்லியமாகக் கணித்து, அதற்கு ஏற்ற பாணியைத் தேர்ந்தெடுத்து வலம் வருகிறது.

அதுவும் தொழில்துறை என்று வந்துவிட்டால் டெக்னாலஜியை பயன்படுத்துவதில் சீனா படு ஸ்மார்ட். மனிதர்களை மட்டும் நம்பியிருந்தால் உற்பத்தியைப் பெருக்க முடியாது என்பதை சரியாகப் புரிந்து கொண்டு எக்கச்சக்கமான ரோபோக்களை களமிறக்கி செயல்பட்டு வருகிறது.

என்ன ஒரு ஆயிரம் ரோபோக்கள் இருக்குமா என்று குறைத்து மதிப்பிட வேண்டாம். ஏறத்தாழ 20 லட்சம் ரோபோக்களை தொழில்துறையில் ஈடுபடுத்தி திகைக்க வைக்கிறது. மற்ற நாடுகள் பயன்படுத்தும் ரோபோக்களை ஒட்டுமொத்தமாகக் கூட்டி பார்த்தாலும், சீனாவின் எண்ணிக்கையை நெருங்கக் கூட முடியாது.

சர்வதேச ரோபாடிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, 2024-ம் ஆண்டில் மட்டும் 3 லட்சம் ரோபோக்களை களமிறக்கி ஆச்சரியப்பட வைத்துள்ளது சீனா. போட்டி நாடான அமெரிக்காவோ, வெறும் 30 ஆயிரம் ரோபோக்களை தான் பயன்படுத்தி இருக்கிறது. தானியங்கி முறையில் பொருட்களை உற்பத்தி செய்வதில் சீனா எவ்வளவு கண்ணும் கருத்துமாக உள்ளது என்பதை இந்த அறிக்கை தெள்ள தெளிவாகக் காட்டுகிறது.

தொழில்துறையில் அதிக ரோபோக்களை பயன்படுத்தும் நாடு என்ற பெருமைக்காக மட்டும் சீனா இதனைச் செய்யவில்லை. ரோபோ பயன்பாட்டால் அந்நாடு அடைந்த லாபங்களை சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக, ரோபோ பயன்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜப்பானை பின்னுக்கு தள்ளி, அந்த நாட்டின் மார்க்கெட்டை எல்லாம் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

கண்ணாடி உற்பத்தியில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளையெல்லாம் கீழே சாய்த்து, தன் கொடியைப் பறக்கவிட்டுள்ளது சீனா. மற்ற நாடுகளும் இந்த ஐடியாவை பின்பற்றலாமே என்றால், அந்த இடத்தில் தான் சீனா தனித்துவமாகத் தெரிகிறது. ரோபோக்களை தயாரிக்கும், நிர்வகிக்கும், பழுதுபார்க்கும் பணியாளர்கள் சீனாவில் ஏராளம். ஏதாவது, சிறு பாதிப்பு என்றாலும் கூட தொய்வின்றி பணிகள் நடைபெறுவதற்கான சூழலை அந்நாடு ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளது.

தற்போது ட்ரெண்ட்டில் உள்ள ARTIFICIAL INTELLIGENCE-லும் கைதேர்ந்து இருப்பது கூடுதல் பிளஸ் பாய்ண்ட். இப்படி ரோபாடிக்ஸ் மற்றும் ARTIFICIAL INTELLIGENCE-ஐ ஒருசேர புகுத்தி, தொழில்துறையில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள சீனா, பிற முன்னேறிய நாடுகளுக்குச் சவால் விடுத்து வருகிறது என்றே கூறலாம்.

Tags: chinausaArtificial intelligencejappanChina deploys 2 million robots in industry: America and Japan suffer from losing market
ShareTweetSendShare
Previous Post

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

Next Post

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies