தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

Murugesan M by Murugesan M
Sep 26, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொழில்துறையில் லட்சக்கணக்கான ரோபோக்களை களமிறக்கி அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது சீனா. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்….

சீனா… தொழில்நுட்ப பயன்பாடு என்று வந்துவிட்டால் எப்போதும் போட்டி போட்டு முன்னிலை வகிக்கும். இனி தொழில்நுட்பம் தான் உலகை நகர்த்தும் என்பதை துல்லியமாகக் கணித்து, அதற்கு ஏற்ற பாணியைத் தேர்ந்தெடுத்து வலம் வருகிறது.

அதுவும் தொழில்துறை என்று வந்துவிட்டால் டெக்னாலஜியை பயன்படுத்துவதில் சீனா படு ஸ்மார்ட். மனிதர்களை மட்டும் நம்பியிருந்தால் உற்பத்தியைப் பெருக்க முடியாது என்பதை சரியாகப் புரிந்து கொண்டு எக்கச்சக்கமான ரோபோக்களை களமிறக்கி செயல்பட்டு வருகிறது.

என்ன ஒரு ஆயிரம் ரோபோக்கள் இருக்குமா என்று குறைத்து மதிப்பிட வேண்டாம். ஏறத்தாழ 20 லட்சம் ரோபோக்களை தொழில்துறையில் ஈடுபடுத்தி திகைக்க வைக்கிறது. மற்ற நாடுகள் பயன்படுத்தும் ரோபோக்களை ஒட்டுமொத்தமாகக் கூட்டி பார்த்தாலும், சீனாவின் எண்ணிக்கையை நெருங்கக் கூட முடியாது.

சர்வதேச ரோபாடிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, 2024-ம் ஆண்டில் மட்டும் 3 லட்சம் ரோபோக்களை களமிறக்கி ஆச்சரியப்பட வைத்துள்ளது சீனா. போட்டி நாடான அமெரிக்காவோ, வெறும் 30 ஆயிரம் ரோபோக்களை தான் பயன்படுத்தி இருக்கிறது. தானியங்கி முறையில் பொருட்களை உற்பத்தி செய்வதில் சீனா எவ்வளவு கண்ணும் கருத்துமாக உள்ளது என்பதை இந்த அறிக்கை தெள்ள தெளிவாகக் காட்டுகிறது.

தொழில்துறையில் அதிக ரோபோக்களை பயன்படுத்தும் நாடு என்ற பெருமைக்காக மட்டும் சீனா இதனைச் செய்யவில்லை. ரோபோ பயன்பாட்டால் அந்நாடு அடைந்த லாபங்களை சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக, ரோபோ பயன்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜப்பானை பின்னுக்கு தள்ளி, அந்த நாட்டின் மார்க்கெட்டை எல்லாம் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

கண்ணாடி உற்பத்தியில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளையெல்லாம் கீழே சாய்த்து, தன் கொடியைப் பறக்கவிட்டுள்ளது சீனா. மற்ற நாடுகளும் இந்த ஐடியாவை பின்பற்றலாமே என்றால், அந்த இடத்தில் தான் சீனா தனித்துவமாகத் தெரிகிறது. ரோபோக்களை தயாரிக்கும், நிர்வகிக்கும், பழுதுபார்க்கும் பணியாளர்கள் சீனாவில் ஏராளம். ஏதாவது, சிறு பாதிப்பு என்றாலும் கூட தொய்வின்றி பணிகள் நடைபெறுவதற்கான சூழலை அந்நாடு ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளது.

தற்போது ட்ரெண்ட்டில் உள்ள ARTIFICIAL INTELLIGENCE-லும் கைதேர்ந்து இருப்பது கூடுதல் பிளஸ் பாய்ண்ட். இப்படி ரோபாடிக்ஸ் மற்றும் ARTIFICIAL INTELLIGENCE-ஐ ஒருசேர புகுத்தி, தொழில்துறையில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள சீனா, பிற முன்னேறிய நாடுகளுக்குச் சவால் விடுத்து வருகிறது என்றே கூறலாம்.

Tags: chinausaArtificial intelligencejappanChina deploys 2 million robots in industry: America and Japan suffer from losing market
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

Next Post

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

Related News

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies