கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!
Jan 14, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் தொடங்கி ராமநாதபுரத்தில் நிறைவடையும் வைகையாறு மதுரையை கடக்கும்போது கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்படும் வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு மலைத்தொடரில் பிறக்கும் வைகை ஆறு, மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாகச் சுமார் 250 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் கண்மாயில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. கடலில் கலக்காத ஒரே நதி எனும்பெயரைப் பெற்றற வைகை நதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத் தேவையோடு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இலக்கியங்களில் பாடப்பட்ட பெருமைக் கொண்ட வைகை நதி, மதுரை மாநகருக்குள் நுழைவதில் தொடங்கி மாநகரை கடக்கும் வரையிலான 120கிலோ மீட்டர் தூரம் அதிகளவில் மாசுபடுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. கழிவுநீர் கலப்பதோடு, பிளாஸ்டிக் குப்பைகள், கட்டட மற்றும் இறைச்சிக் கழிவுகள் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து சுகாதார சீர்கேடு எழுந்துள்ளது.

வைகையாற்றை காக்கவும், மாசடைவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையிலும், 30க்கும் அதிகமான இடங்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. வைகை ஆற்றிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் வைகையாற்றில் கழிவுநீர்கலப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வைகை ஆற்றைப் பாதுகாக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும், கழிவுகளைக் கொட்டும்நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்எனச் சமூகக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், வைகைஆற்றைப் புதுப்பிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் கால்வாய் குழாய்கள் வழியாகக் கழிவுநீர் வைகையாற்றில் கலக்கும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் துணை மேயர் நாகராஜன் தெரிவித்துள்ளார் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசனத் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மதுரை மாநகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்தி வைகை ஆற்றை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: கழிவுநீர் ஓடையாகும் வைகைMaduraiNEWS TODAYVaigai becomes a sewage stream: Suffering due to the negligence of the corporation administration
ShareTweetSendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!

Next Post

3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை – அதிர்ச்சியில் அர்ஜென்டினா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies