ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு இரண்டாவது சீசனை முன்னிட்டு 17 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில் 70-க்கும் மேற்பட்ட ரகங்களான டேலியா, பெட்டூனியா, சால்வியா, லில்லி, கிரைசாந்திமம் உள்ளிட்ட மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இதைக்காண ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் பூத்துக்குலுங்கும் மலர்களை உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.
பின்னர் புல்வெளிகளில் விளையாடியும், தங்கள் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.